வலைப்பதிவில் தேட...

Thursday, May 6, 2010

இவர்கள் மக்களில் சேர்த்தி இல்லையா

2001 ஜனவரி 26:  குஜராத் மாநிலம் பூஜ் நகரில் பூகம்பம் வந்தது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகாம் கள்அமைக்கப்பட்டது. ஆதிக்க சாதி வெறிதலைக்கேறிய 'படேல்'கள் முகாம்களை விட்டு வெளியேறினார்கள். அப்போது  அவர்கள் சொன்ன காரணம் "என்னை விடதாழ்ந்த சாதியைச்சேர்ந்த மனிதனோடு நானும் எப்படி ஒன்றாக தங்கி இருக்க முடியும் ?" நல்லவேளை இயற்கைக்குத்தான் எந்த பேதமும் இல்லை மனிதர்களுக்கு  நிறையத்தான் இருக்கிறது போலும்.

2002 பிப்ரவரி 27:  குஜராத் மாநிலம் கோத்ராவில் எஸ் 8 என்ற பெட்டி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில்எரிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த வன்முறைகளில்முகமதியர்கள் இரண்டாயிரம் பேர்கொல்லப்பட்டனர் .ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆனார்கள். அப்போது கூட ஒரிரு இடங்களில் முகாமகள் அமைக்கப்பட்டது.அகமதாபாத் பகுதியில் இந்துக்களுக்கென்று அமைக்கப்பட்ட முகாமகளில்மறுபடியும் இதே பிரச்சனை வெடித்ததைடைம்ஸ் ஆஃப் இந்தியாவெளிப்படுத்தியது.

2004 டிசம்பர் 24: நாடு ,தேசம் ,மொழி, இனம் என்று எதுவும் பாராமல் மனிதர்களைக்கொள்ளை கொண்டது "சுனாமி" என்னும் இயற்கைப்பேரழிவு இரண்டரை லட்சத்துக்கும் மேல் உலக மக்கள் பலியானார்கள். தமிழகத்தில் தற்காலிக முகாம் கள் அமைக்கப்பட்டது. தலித்துக்ளின் துணையோடு சவக்குழியில் விழத்தயாராக இருக்கும் சாதி, உயிரோடு இருக்கும் தலித்துகளோடு தங்குவதற்கு இடம் கொடுக்க வில்லை. இன்னும் கொடுமை என்னவென்றால்  அழுகிக்கிடக்கும் சவங்களைக் கூட தூக்குவதற்கு  சாதிமனம் ஒத்துக்கொள்ள வில்லை. கடைசியில் சாதாரண  மரணங்களின் போது சேவை செய்யும் அருந்ததி இன மக்கள்தான் கும்பல் கும்பலாக அனைத்து சாதிப்பிணங்களையும் பெரிய குழிகளில் சவ அடக்கம் செய்தார்கள்.
மக்களுக்காக 'இறுதி' வரை  உழைக்கும் பகுதியினரை 'ஆட்டைக்கு சேர்க்காமல்' எத்தனைக்காலம்தான் இழுத்தடிப்பது ....?

No comments: