வலைப்பதிவில் தேட...

Monday, August 30, 2010

கோத்ரா நாட்கள் 3

ஆமதாபாத்தும், பரோடாவும் கோத்ரா ரயில் எரிப்பின் (58 பேர் ரயில் எரிப்பில் சாம்பலானார்கள்) பின்னணியில் மனித உயிர்களின் கருகல் புகை மண்டலத்தில் ( சுமார் இரண்டாயிரம் பேர் வரை படுகொலை செய்யப்பட்டனர்) மிதந்து கொண்டிருந்த நேரம் அது.
பரோடாவில் (வடோதரா என்பது தற்போதைய பெயர்)  முக்கிய வீதியில் இருந்த ஒரு மசூதிகூட
(தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அது வரை இருந்து வந்தது) இடிக்கப்பட்டது.

நான் கோத்ராவில் மொத்தம் வாழ்ந்திருந்த இரண்டரை ஆண்டுகளில் எட்டு முறை விருது நகருக்கு வந்து போய் இருந்திருக்கிறேன்.
பரோடா ரயில் நிலையம் இருப்பது மகாராஜா சாயாஜிராவ் (MS UNIVERSITY)பல்கலைக்கழகத்தின் எதிரில். அண்ணல் அம்பேத்கர் பணியாற்றிய பெருமையுடையது. சிறந்த கல்விமானாகிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குப்பணி செய்ய நியமிக்கப்பட்ட ஒரு சாதி வெறியனால்   குடிக்ககூட தண்ணீர் மொண்டு கொடுக்க/ கோப்புகளைத்தூக்கிச்செல்ல மறுத்த காரணத்தால்குறைந்த காலத்தில் இந்தப்பல்கலைக்கழகத்தினின்றும் வெளியேறி மறுபடியும் பம்பாய் ( 1995 முதல் மும்பை) சென்று குடியேறினார் என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இந்துத்துவா பரிசோதனைக்கூடமாக மோடி குஜராத்தை மாற்றியமைக்க முடிவெடுத்தன் பின்னணியில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு எம் எஸ் பல்கலைக்கழகப்பேராசிரியர் பணிக்கர் இந்துத்துவா ஆட்களால் தாக்கப்பட்டார் என்பதை நாம் அறிவோம் பணிக்கர் அவர்களது   மாணவர்களது ஓவியங்களுக்காகவும் அதில் உள்ள உணர்வுகள் மதககோட்பாடு ரீதியாகவும் தங்களை புண்படுத்துவதாகவும் முடிவெடுத்தடன் விளைவாக இந்தக்கொடுமை நடந்தேறியது. கோத்ராவுக்கும் பரோடாவுக்கும் 75 கி மீ தூரம்.  ஒன்றரை மணி நேர ரயில்/பேருந்து பயணம்.

மதக்கலவர நாட்களில் ஒரு முறை இப்படித்தான் விருது  நகருக்கு கிளம்பி வர ஒரு முறை நேர்ந்தது. அவ்வப்போது விடுமுறையில் எட்டுநாட்கள் வந்து விட்டுப் போவதை பாப்பா "எப்போப்ப முழுசா வருவீங்க" என்று கேட்டது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இரவு  பத்து மணிக்கு கோத்ராவிலிந்து புறப்பட்டு பரோடா பஸ் ஸ்டேஷன்  சேர்ந்தேன்.   பனிரெண்டு மணியளவில் ரயில்  நிலையம் இரண்டாம் வகுப்பு தங்கும் அறைக்கு சென்றேன். (திரு நெல்வேலியில் ஜங்க்ஷனுக்கு பக்கத்தில் பஸ்  நிலையம் இருப்பதுபோல்தான் பரோடாவிலும்  ஜங்க்ஷனுக்கு எதிரில்  பஸ்  நிலையம் இருக்கிறது)

டிக்கெட் பரிசோதகர்  வ ந்து டிக்கெட்கேட்டார்.நான் பேருந்தில் வந்த விபரம் சொன்னேன். ரயில் டிக்கெட் கேட்டார். காலை எட்டரை  மணிக்கு செல்லவேண்டிய  நவ ஜீவனின் டிக்கட்டை காண்பத்தேன். வெளியே போக ஆணையிட்டார். பெட்டியோடு வாசலுக்கு வந்தேன். எம் எஸ் பல்லைக்கழக நுண்கலை மாணவர்கள் சிலர் லைவ் ஒவியங்களுக்காக சிரத்தை எடுத்துக்கொண்டிருந்தார்கள். பலர்  விடுதிக்கு சென்று விட்டார்கள் போல.

என்னைப்போலவே விரட்டப்பட்டவர்கள்   நிறை ந்து கிடந்தார்கள். ஆட்டோக்காரர்கள் பிச்சைக்காரர்கள் பயணத்திற்கு காத்திருப்பவர்கள் என விழித்திருக்கும் மதுரை போல பரோடா ஸ்டேஷன் மின்னியது.
உட்கார்ந்து கொண்டேதூங்க முயற்சித்தேன்
இரணடு மணி ஆகியது
மணி மூன்றைக்கடந்தது
கண்கள் செருகின
துணி மணி அடங்கிய பெட்டி பறி போய்விடுமோ என்ற பயம வேறு என்னைத் தொல்லைப்படுத்தியது.  பெட்டியில்  கை வை த்து அப்படியே தலைசாய்த்து நன்றாக அசந்திருப்பேன் மணி  ஐந்தரை.  சந்த டி அதிகமானது. கண்கள்
நெரு  நெரு வென எரிச்சலுடன்.
பெட்டியைத்தூக்கிக்கொண்டுமீண்டும் இரண்டாவது வகுப்பு வெயிட்டிங்க ஹாலுக்குப் போனேன் முகத்தைக்ழுவ.
டிககெட்
செக்கர் யாரும் இல்லை.

Sunday, August 8, 2010

நெஞ்சில் உரமுமின்றி .....

"நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத்திறமும் இன்றி
வஞ்சனை செய்வாரடி
கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி"
பாரதியின் பொன் வரிகள் இது.


அது 1999 மத்தியில் ஆண்டு கொண்டிருந்தது
தேசீய ஜன நாயக முன்னணி (பா. ஜ. க தலைமை)
வழக்கொழிந்து கொண்டிருந்த( இன்றைக்கும் கூட)
சமஸ்கிருதத்தை செம்மொழியாக அறிவித்து
ஆயிரம் கோடிரூபாயில் அம்மொழியின்
பெருமை, தொன்மை பற்றிப்பறை சாற்ற
வேண்டிய ஏற்பாடுகள்  நாடு முழுவதும் தூள்
பறந்து கொண்டிருந்தன.


மதுரையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத்
தேர்வு செய்யப்பட்ட மோகன் தனது கன்னிப்பேச்சைத்
தாய்த்தமிழில் துவக்கி முழங்குகிறார்.  அதற்கான
முன்னொப்புதலை முறையாகப்பெற்றுதான்.
1999ஆம் ஆண்டை சமஸ்கிருத ஆண்டாக அறிவித்ததைப்போல்
2000 ஆவது ஆண்டை தமிழ் மொழியைல் செம்மொழியாக அறிவித்திட
வேண்டும் என்ற கோரிக்கையை அவர் உரத்து எழுப்பினார்.


உலகத்தின்தொன்மையான மொழிகள் என்றால்  கிரேக்கம், லததீன்,தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவதான். இயேசு நாதம் போதித்த ஹிப்ரு மொழி கூட இப்போது வழக்கில் இல்லை எனப்படுகிறது.


அதே மதுரையிலிருந்து பத்தாண்டுகள் இடைவெளிக்குப்பிறகு( 2009இல்) தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு. மு. க. அழகிரி. மத்திய ரசாயனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர்.  பாராளுமன்றத்துக்கு சென்று சுமார் ஒன்னேககால் வருடம் கழித்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது கன்னிப்பேச்சை (த்தமிழில் அல்ல) ஆங்கிலத்தில் எழுதிப்படித்திருக்கிறார்.  தமிழுக்காக போராட்டம் நடத்தி தமிழே மூச்சு என்று வாழ்ந்திருக்கும் திமுக உறுப்பினருக்கு இந்த கதியாவென நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.

எட்டாம் அட்டவணையில் தற்சமயம் 22 மொழிகள் அங்கீரிக்கப்பட்டு இருக்கிறது மத்திய அரசால். ஆனாலும் மந்திரியாக இருப்பவர்கள் பாராளு மன்றத்தில்பேசவேண்டும் என்றால் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச அனுமதிக்கப்படுவார்களாம்.

இந்தி தெரிந்த தயா நிதி மாறன் போன்றவர்களுக்கு இந்தப்பிரச்னையெல்லாம் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் 9 மொழிகளில் பேசிக்கொள்ளலாம் அனைத்து மொழிகளிலும் கேட்கும் "மொழிமாற்ற வசதியோடு"

இன்றைக்கு இருக்கிற நவீன தொழில் நுட்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுக்கும் இந்த வசதி செய்தது தர முடியும் என்கிறார்  சீதாராம் எச்சூரி எம்.பி.

கோவையில் உலகச்செம்மொழித்தமிழ்  நாடு மாநாடு ( மானாட மயிலாட போலல்ல) நடந்து முடிந்திருக்கிறது. தலைக்குடிமகள் பிரதீபா வந்து சென்றிருக்கிறார்.  அதே நேரத்தில்தான்  உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதாட போராடிக்கொண்டிருந்தார்கள்.
பாராளுமன்றத்தில் அவரவர் தாய் மொழியில் பேசுவதற்கான ஏற்பாடு ஒன்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடவும் வாய்ப்பு வாய்க்கப்பெறும் நாள் எந்த நாளோ.

"கூட்டத்தில் கூடி நின்று
கூவிப்பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி
நாளில் மறப்பாரடி"

என்னும் பாரதியின் வரிகள் மெய்ப்படக்கூடாது

Thursday, August 5, 2010

மாண்பு மிகுந்தவர்கள்...

காமன் வெல்த் போட்டி வரும் அக்டோபரில் நடக்க இருக்கிறது. டெல்லிமாநகரத்தில். ரூபாய் 36000 கோடி அளவுக்கு  ஊழல் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக கும்பகோணம் மாண்பு மிகு எம்.பி மணிசங்கர அய்யர் தெரிவித்து இருக்கிறார். அவர் காங்கிரஸ் மந்திரிசபையிலும் கூட இருக்கிறார்.

சுமார்    ஏழு  நூறு கோடி ரொக்கப்பணம் டெல்லி மாநில அரசாங்கத்தால் அட்டவணை சாதியினருக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தனி நிதியினின்றும் இந்த விளையாட்டுப்போட்டிக்கு  ஒதுக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. RTI  சட்டத்தின் அடிப்படையில் வந்த புள்ளி விபரங்களை தன்னார்வ நிறுவனம் ஒன்று கையில் வைத்திருக்கிறது.

இதே போலத்தான் நமது மதுரை எம். பி மற்றும்  உர மந்திரி செம்மொழி மா நாட்டுப்பந்தலிலிருந்து பறந்து சென்று பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு
காபினெட்டில் சம்மதம் தெரிவித்து விட்டு வந்தார். பெட்ரோல் உயர்வு சிறிதளவேனும்  மக்களைப்பாதிக்கத்தான் செய்யும் என்று பொன்மொழி விடுத்தார் கோவையில்.

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் பணிகள் முடங்கும் அளவுக்கு விவாதங்கள் வாதப்பிரதிவாதங்கள் தெரித்துக்கொண்டிருக்கிறது.

முப்பத்தி மூன்று சதமான மகளிர் ஒதுக்கீடு
இந்தப்பரபரப்பில் நிறைவேறத்தான் வேண்டும்.


பாதி மந்திரிமார்கள் பாராளுமன்றத்திலும், ராஜ்ய சபையிலும் கோடீஸ்வரர்களாக வயது வரம்பின்றி குழுமி இருப்பதை அவ்வப்போது ஃபோர்ப்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகள்  அறிவித்துக்கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்   ஒரு லட்சம் கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாகக்கூறப்படும் தொலைத்தொடர்பு மந்திரி
எந்த பாதிப்பும் இல்லாமல்  3 ஜி யில் அரசுக்கு அதிக லாபம் செய்துகொண்டிருக்கிறார்.

பி எஸ் என் எல்  நிறுவனத்திடமிருந்து ரூபாய் 18 500 கோடி ரூபாய் அரசுக்கு 2ஜி சேவைக்காகவும் அகன்ற கற்றை சேவைக்காகவும் அரசுக்கு கப்பம் கட்டிய வகையிலும் முழுமையான அரசு நிறுவனமோ மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டுவதைப்போன்று
அல்லது அரசு நிர்ணயித்தபடி பணம் கட்டி சேவை செய்வதன் விளைவாகவும்
முதன் முறையாக ரூபாய்   1823  கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கித்துவங்கியிருக்கிறது.

ஆனாலும் என்ன மக்களின் பிரதி நிதிகளான நமது மாண்பு மிகு உறுப்பினர்களின் சம்பளம்தான் உயரப்போகிறதே! அவர்கள் தற்சமயம் பெற்று வருவதைப்பாருங்கள்:
மாதசம்பளம்                                                 : ரூ 12000
மாத தொகுதி செலவு                              : ரூ 10000
மாத அலுவலக செலவு                         : ரூ 14000
மாத பயண செலவு                                    : ரூ 48000
தினசரி படி                                                      : ரூ     500
முதல் வகுப்பு ஏ சி ரயில் பயணம்( அகில இந்திய அளவில்) எத்தனை முறையேனும்.
விமானப்பயணம் வருடத்திற்கு            40  முறை
(மனைவியுடன்/உதவியாளருடன்)
எம் பி தங்கும் வீடு டெல்லியில்           : இலவசம்
மின்சார செலவு  அதிகபட்சம்                   50000 யூனிட்டுகள்
இலவச தொலைபேசி அழைப்புகள்    170000  கால்கள்
மாத செலவு மட்டும்                                    2.66  லட்சங்கள்.
வருடத்திற்கு சுமாராக                               32  லட்சங்கள்
ஐந்து ஆண்டுகளுக்கு சராசரியாக
 ஒரு எம் பிக்கு  ஆகும் செலவு            : 1,60,00,000
(ஒரு கோடியே அறுபது லட்சம் மட்டும்தான்).

இந்த சலுகைகளும் சம்பளமும் போதாதென்று ஒவ்வொரு எம்.பிக்கும் ஆகும் செலவை நடப்புக்கூட்டத்தொடரிலேயே
ஐந்து மடங்கு அதிகரிக்க முடிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன்என்பதில் பெருமை கொள்ள வேண்டிய தருணமாகவும் நம்மை நாமே
இவர்களோடு சமகாலத்தில் வாழும் திறன் படைத்த  பாக்கியவான்களாகக் கருதிக்கொள்ளவுமான  நேரமல்லாமல் வேறென்ன?