எனது வலைத்தளத்திற்கு அழகிய நாட்கள் என்று பெயரிட்டு இத்துடன் 50 ஆவது பதிவாகிறது. உண்மையில் சொல்லப்போனால் இள வயது பதின்வயது நினைவுகளில் அலை ஓட்டத்தைப்பதிவு செய்யவே அழகிய நாட்கள் என்று பெயரிட்டேன்.
"பட்டிக்காடா பட்டணமா" படத்தில் ஒரு காட்சி வரும். நகர்ப்புற மனைவி ஒரு கள்ளிச்செடியை வீட்டுக்குள் கொண்டு வந்து ஏற்கனவே வைத்திருந்த கலப்பையை அகற்றி விட்டு அந்த இடத்தில் கள்ளிச்செடியை வைத்து விடுவார். நாட்டுப்புற கணவன் மூக்கையா வீட்டுக்கு வந்து அதிர்ச்சியாகி கேட்பார். கலப்பையை ஏன் எடுத்தாய் என்று அதற்கு அந்தப்பெண் பதில் சொல்லுவாரே " அழகும் ஆபாசமும் பார்ப்பவர் கண்களில் இருக்கிறது" எனவே நான் செய்ததில் ஒன்றும் தவறில்லை என்பார்.
கிட்டத்தட்ட இந்த நிலைமையில் தான் இன்றைக்கு நாடு இருக்கிறது.
செப் 24 அலகாபாத் நீதி மன்றம் பாபரா ராமரா என முடிவு செய்ய இருக்கிறது அதை ஒட்டி நாடு முழுதும் ரணகளமாகாமல் இருக்க முழுப்பக்க விளம்பரங்கள் வேண்டுகோள்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த தீர்ப்பும் வருகிற செப் 28 க்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அமைதி நிலவினால் அழகிய நாட்கள் இருக்கும்
அக் 3 முதல் 14 வரை நடக்க இருக்கும் காமன் வெல்த் விளையாட்டுகளில் சரியான மைதானம், தங்குமிடம் அமைக்கப்படவில்லை என்பது ஒரு செய்தியாகி இருக்கிறது. 36000 கோடி ரூபாய் செலவழித்தும் நிறைவடையவில்லை பணிகள். ஊழல் அதிகாரிகள் சிலர் சுரேஷ் கல்மாதிக்கு மிக நெருக்கமான அதிகாரிகள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ நான் ஒரு ஆயிரம் கோடி ரூபாய்க்குதான் பொறுப்பேற்பேன் என்று சொல்லுகிறார்.
டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தோ ரூபாய் 780 கோடியை SC/ST நிதியிலிருந்து இந்த காமன் வெல்த் விளையாட்டுக்காக ஒதுக்கி விட்டு
ஒரு கல்யாண வீடு போலத்தான் இந்த விளையாட்டு. சின்னச்சின்ன குறைகள் எல்லாம் சரியாகப்போய்விடும் என்கிறார்.
பிரதமரோ அவசர அவசரமாக கூட்டம் போட்டு எல்லாம் சரியாக நடக்கட்டும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் என்கிறார் சிறந்த நிர்வாகி என்ற பட்டத்தை அமெரிக்கா அறிவித்த கையோடு.
கங்கையும் யமுனையும் பிரம்மபுத்திராவும் வெள்ளத்தில் ஜனங்களை மூழ்கடித்து சில நூறு பேர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கிறது.
மூன்று லட்சம் ஊழியர்களில் ஒரு லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்ப அரசு நிறுவனமான பி எஸ் என் எல்லில் திட்டம் தயாராக இருக்கிறது
பத்து லட்சத்துக்குமேற்பட்ட இளைஞர்கள் வேலையின்றி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போக்கு கூடிக்கொண்டு இருக்கிறது
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாமல் நீங்க வேண்டும்
என்ற பட்டுக்கோட்டையின் கனவு
மட்டும் அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது மனதை.
வலைப்பதிவில் தேட...
Friday, September 24, 2010
Thursday, September 16, 2010
தியாகி இம்மானுவேல் சேகரன்
1957 செப்டம்பர் 11 அன்று பாரதி நினைவு நாள். அவரது நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த இம்மானுவேல் சேகரன் என்ற ஒரு இளைஞரை ஒன்றினைந்த ராம நாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி நகரில் 33 வயது நிரம்பிய ஒரு மாவீரனை ஒரு கோழையர்கள் கூட்டம் வெட்டி வீழ்த்துகிறது. அப்போது காங்கிரசின் காமராஜர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தலித் மக்களுக்கான விடுதலைக்காக போராடத்துவங்கிய கொஞ்ச நாட்களிலேயே அந்த முன்னாள் ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டார். 2010 செப்டம்பர் அன்று அவரது 53 ஆவது நினைவு நாள்.
பரமக்குடியில் அரசு ஊழியர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிய ஒரு சமாதியில் அஞ்சலி நிகழ்ச்சி வருடாவருடம் அதாவது கடந்த 53 வருடங்களாக நடந்து வருகிறது.
கடந்த ஆறேழு வருடங்களாகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்து அஞ்சலி செலுத்தும் தலித் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்று மருதமலர் ஆசிரியர் உமாசங்கர் குறிப்பிடுகிறார்.
இந்த முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமேற்பட்டு செப்டம்பர் 11 அன்று பரமக்குடி வரை சென்று வர ஒரு மகிழுந்துவில் விருது நகரிலிருந்து நண்பர் வைரமணி மற்றும் விருது நகர் முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன் அகியோருடன் சென்றேன்.
கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் சாரை சாரையாக மக்கள் வெள்ளம். லோடு வேன், கார், பஸ், லாரி இருசக்கர வாகனங்கள், நடை என்று கூட்டமோ கூட்டம். நாங்கள் பரமக்குடி அரசு மருத்துவ மனைக்கு மேல் வாகனத்தில் செல்ல முடியவில்லை.
ஒரு நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் காட்டுப்பரமக்குடி தாண்டி நடந்து சென்றோம். வழியெங்கும் ஃப்ளக்ஸ் போர்டுகள் சுவரொட்டிகள். ஆதித்தமிழர் பேரவை, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற இயக்கங்களின் சார்பாக வாழ்த்து சுவரொட்டிகள்.
76 வகையான தலித்துகளில் பிரதானமாக அறியப்படுவது பள்ளர், பறையர், சக்கிலியர்
அநேகமாக இந்த மூன்று சாதியினரும் பங்கேற்கும் மாபெரும் விழாவாக இருக்கிறது இந்த குருபூசை நிகழ்ச்சி. குறைந்த எண்ணிக்கையிலான குறவர், புதிரைவண்ணான் போன்ற மற்ற தலித்துகளும் விடுபடாமல் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெறுகிறது. ஐந்தில் ஒரு பகுதியாக அறியப்படும் தலித்துகளின் ஒன்று பட்ட எழுச்சியைப்பார்ர்க முடிந்தது.
அரசு விழாவாக இந்த குருபூசை நிகழ்ச்சியை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கூட வலுவாக எழுந்திருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். ஏனெனில் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்கள் ஒருங்கிணைந்து வருகிறது என்பது தான் ஆதாரம்.
பரமக்குடியில் அரசு ஊழியர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிய ஒரு சமாதியில் அஞ்சலி நிகழ்ச்சி வருடாவருடம் அதாவது கடந்த 53 வருடங்களாக நடந்து வருகிறது.
கடந்த ஆறேழு வருடங்களாகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்து அஞ்சலி செலுத்தும் தலித் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்று மருதமலர் ஆசிரியர் உமாசங்கர் குறிப்பிடுகிறார்.
இந்த முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமேற்பட்டு செப்டம்பர் 11 அன்று பரமக்குடி வரை சென்று வர ஒரு மகிழுந்துவில் விருது நகரிலிருந்து நண்பர் வைரமணி மற்றும் விருது நகர் முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன் அகியோருடன் சென்றேன்.
கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் சாரை சாரையாக மக்கள் வெள்ளம். லோடு வேன், கார், பஸ், லாரி இருசக்கர வாகனங்கள், நடை என்று கூட்டமோ கூட்டம். நாங்கள் பரமக்குடி அரசு மருத்துவ மனைக்கு மேல் வாகனத்தில் செல்ல முடியவில்லை.
ஒரு நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் காட்டுப்பரமக்குடி தாண்டி நடந்து சென்றோம். வழியெங்கும் ஃப்ளக்ஸ் போர்டுகள் சுவரொட்டிகள். ஆதித்தமிழர் பேரவை, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற இயக்கங்களின் சார்பாக வாழ்த்து சுவரொட்டிகள்.
76 வகையான தலித்துகளில் பிரதானமாக அறியப்படுவது பள்ளர், பறையர், சக்கிலியர்
அநேகமாக இந்த மூன்று சாதியினரும் பங்கேற்கும் மாபெரும் விழாவாக இருக்கிறது இந்த குருபூசை நிகழ்ச்சி. குறைந்த எண்ணிக்கையிலான குறவர், புதிரைவண்ணான் போன்ற மற்ற தலித்துகளும் விடுபடாமல் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெறுகிறது. ஐந்தில் ஒரு பகுதியாக அறியப்படும் தலித்துகளின் ஒன்று பட்ட எழுச்சியைப்பார்ர்க முடிந்தது.
அரசு விழாவாக இந்த குருபூசை நிகழ்ச்சியை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கூட வலுவாக எழுந்திருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். ஏனெனில் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்கள் ஒருங்கிணைந்து வருகிறது என்பது தான் ஆதாரம்.
Wednesday, September 8, 2010
சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்.
"சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்
வெறும் சோற்றுக்கே வந்ததிப்பஞ்சம்"
-மகா கவி பாரதி.
"அரசு உணவுக்கிடங்குகளில் தகுந்த முறையில் பாதுகாக்க வழியின்றி அழுகிக்கொண்டிருக்கும் அல்லது எலிகள்சாப்பிட்டுக்
கொழுத்துக்கொண்டிருக்கும் சுமார் 7 லட்சம் கோடி டன் உணவுப்பொருளை தேசம் முழுதும் பரவிக்கிடக்கும் 37 கோடி ஏழை ஜனங்களுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும்"
- உச்ச நீதி மன்றம்
"உச்ச நீதி மன்றம் குறிப்பிட்டது ஆணையல்ல;
வெறும் வழி காட்டுதலே அல்லது ஆலோசனை மட்டுமே "
-மத்திய வேளாண் மந்திரி சரத் பவார்.
ஆலோசனை ஒன்றும் வழங்கவில்லை;
உண்மையிலேயே ஏழைகளுக்கு இலவசமாக உணவுப்பொருட்களை வழங்கவே உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது
-மறுபடியும் உச்ச நீதிமன்றம்.
அரசின் கொள்கைகளில் தலையிடுவதற்கு உச்சநீதி மன்றத்தின் வேலையல்ல. இலவசமாக விளை பொருட்களை வழங்கினால் அது விவசாயப்பெருங்குடி மக்களுக்கு செய்யும் துரோகம்
- பாரதப்பிரதமர் மன்மோகன் சிங்
'பெரிய மனுஷன் சொன்னா பேப்பரிலே போடுவாங்க
சின்ன மனுஷன் சொன்னா ஜெயிலிலே போடுவாங்க'
- கலைவாணர் என். எஸ் கே.
சரியான ஒரு தீர்ப்புக்கு மிகச்சரியான நேரத்தில் ( ?)
பத்திரிகையாளர் மத்தியில் தனது அக்கரையை (!)
வெளிப்படுத்தியிருக்கிறார் பிரதமர்.
இதேபோல தொலைத்தொடர்புத்துறையில் நடந்த
2 ஜி ஏலத்தின் போது (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்)
பிரதமரின் ஆலோசனைப்படிதான் குறைந்த விலைக்கு
ஏலம் விடப்பட்டது என்று தொடர்ச்சியாக சொல்லிகொண்டிருந்த
மந்திரியின் குரலுக்கு
இதுவரை வாய் திறக்காத நமது பிரதமரை நினைத்தால்....
உண்மையிலே சொல்லக்கொதிக்குது நெஞ்சம்.
வெறும் சோற்றுக்கே வந்ததிப்பஞ்சம்"
-மகா கவி பாரதி.
"அரசு உணவுக்கிடங்குகளில் தகுந்த முறையில் பாதுகாக்க வழியின்றி அழுகிக்கொண்டிருக்கும் அல்லது எலிகள்சாப்பிட்டுக்
கொழுத்துக்கொண்டிருக்கும் சுமார் 7 லட்சம் கோடி டன் உணவுப்பொருளை தேசம் முழுதும் பரவிக்கிடக்கும் 37 கோடி ஏழை ஜனங்களுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும்"
- உச்ச நீதி மன்றம்
"உச்ச நீதி மன்றம் குறிப்பிட்டது ஆணையல்ல;
வெறும் வழி காட்டுதலே அல்லது ஆலோசனை மட்டுமே "
-மத்திய வேளாண் மந்திரி சரத் பவார்.
ஆலோசனை ஒன்றும் வழங்கவில்லை;
உண்மையிலேயே ஏழைகளுக்கு இலவசமாக உணவுப்பொருட்களை வழங்கவே உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது
-மறுபடியும் உச்ச நீதிமன்றம்.
அரசின் கொள்கைகளில் தலையிடுவதற்கு உச்சநீதி மன்றத்தின் வேலையல்ல. இலவசமாக விளை பொருட்களை வழங்கினால் அது விவசாயப்பெருங்குடி மக்களுக்கு செய்யும் துரோகம்
- பாரதப்பிரதமர் மன்மோகன் சிங்
'பெரிய மனுஷன் சொன்னா பேப்பரிலே போடுவாங்க
சின்ன மனுஷன் சொன்னா ஜெயிலிலே போடுவாங்க'
- கலைவாணர் என். எஸ் கே.
சரியான ஒரு தீர்ப்புக்கு மிகச்சரியான நேரத்தில் ( ?)
பத்திரிகையாளர் மத்தியில் தனது அக்கரையை (!)
வெளிப்படுத்தியிருக்கிறார் பிரதமர்.
இதேபோல தொலைத்தொடர்புத்துறையில் நடந்த
2 ஜி ஏலத்தின் போது (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்)
பிரதமரின் ஆலோசனைப்படிதான் குறைந்த விலைக்கு
ஏலம் விடப்பட்டது என்று தொடர்ச்சியாக சொல்லிகொண்டிருந்த
மந்திரியின் குரலுக்கு
இதுவரை வாய் திறக்காத நமது பிரதமரை நினைத்தால்....
உண்மையிலே சொல்லக்கொதிக்குது நெஞ்சம்.
Subscribe to:
Posts (Atom)