வலைப்பதிவில் தேட...

Thursday, April 22, 2010

மகத்தான வேலை நிறுத்தம்






உலகின் தொலைதொடர்புநிறுவனங்களில் ஏழாவது இடத்திலும்
இந்திய நாட்டின் முதன்மையான
நிறுவனமாகவும் இருப்பது
பி எஸ் என் எல்.
அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒரு ஆகப்பெரிய நிறுவனம்பி எஸ் என் எல் .
சுமார் மூன்று லகஷம் கிலோமீட்டர் கண்ணாடிஇழை கேபிள்களை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக பதித்து சேவை புரிந்து வருகிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக் அளவில் தொலைதொடர்பு இருப்பது இந்தியாவில்தான்.(மொத்த இணைப்புகள் வயருடன்உள்ள டெலிபோன் மற்றும் மூன்று வயர் ஐம்பத்தாறு கோடியே இருபத்தியிரண்டு லக்ஷத்து பத்தாயிரம் - டெலி டென்சிட்டி இந்தியா: நாற்பத்திஎட்டு சதம் .இந்திய நாட்டின் ரயில்வே தண்டவாளத்தின் மொத்த நீளமே அறுபதினாயிரம் கிலோமீட்டர்தான்)
சாம் பிட்ரோடா என்ற தொலைதொடர்பு நிபுணரின்(?) தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை இப்படிசொல்லிச்செல்லுகிறது :

இருக்கின்ற
மூன்று லக்ஷம் ஊழியர்களில் ஒரு லக்ஷம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது;

பி எஸ் என் எல் பங்குகளில் முப்பது சதமான பங்குகளை விற்று விடுவது; (அரசின் பெயரிலேயே அனைத்து பங்குகளும் இருப்பதால் பி எஸ் என் எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்று ஒரு பைசாகூட வராது)

காப்பர் கேபிள்களை தானியாருக்கு தாரை வார்ப்பது ;

ஏழு பெரிய நகரங்களில் நிறுவனத்தின் வசம் இருக்ககூடிய இருபத்திமூன்று லக்ஷம் சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலங்களை விற்பது ;(இருக்கின்ற சொத்துக்கள் ஒன்று கூட அரசின் பெயரிலிருந்து இன்று வரை மாற்றப்படவில்லை) விற்கிற காசெல்லாம் அரசுக்குத்தான் செல்லும்.

நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பிரதமரின் ஆணைப்படி அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை எப்படி இருக்கிறது?
இத்தோடு
தொண்ணூற்றி மூன்று மில்லியன் ஜி எஸ் எம் கருவிகளுக்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்வது;

உயர்மட்டத்தில் இருக்ககூடிய ஆயிரத்து ஐந்நூறு ஐ டி எஸ் அதிகாரிகளை பத்தாண்டு காலமாக நிறுவனத்திற்குள் கொண்டு வராமல் இருக்கும் அரசின் மெத்தன போக்கு;

நிறுவனத்தின் பணிகளை அவுட் சோர்சிங் மூலம் செய்வது;

எல்லா பிரச்னைகளும் ஊழியர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
விளைவாக,
ஜே எ சி என்கிற ஒரு அமைப்பு அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்களை உள்ளடக்கி உருவானது.
அந்த அமைப்பின் கூட்டு முடிவு மற்றும் வழி காட்டுதலின் அடிப்படையில் ஐ டி எஸ் அதிகாரிகள் தவிர்த்து அனைத்து அதிகாரிகள் அமைப்புகளும் அனைத்து ஊழியர் சாங்கங்களும் காலவரையற்ற ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடப்பட்டது

வரலாற்றில் முதல் முறையாக வங்கி ஊழியர்களைப்போல் எல் ஐ சி ஊழியர்களைப்போல் அதிகாரி தொழிலாளி பேதம் இன்றி மாபெரும் வேலை நிறுத்தப்போர் நடைபெற்றது. ஏப்ரல் எருபதம்தேதி காலை ஆறு மணிக்கு துவங்கியது வேலை நிறுத்தம். நாடு முழுவதும் பல அலுவலகங்கள் பூட்டப்பட்டன. கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பதினோரு மணிக்கு மத்திய மந்திரி ராஜா அவர்களின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு. ஜே எ சி தலைவர்களுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. மாலை மூன்றரை மணிக்கெல்லாம் போராட்டம் முடித்துகொள்ளப்பட்டது.
இது ஒரு துவக்கம் தான்
இனிமேல் ஊழியர்களைப்பாதிக்ககூடிய எந்த ஒரு பிரச்னைஎன்றாலும்
ஒன்று பட்ட போராட்டங்கள் தொடரும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.




No comments: