வலைப்பதிவில் தேட...

Wednesday, February 10, 2010

தலித்துகளுக்கு இடமே இல்லையா


1'திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சமத்துவபுரத்தில் தலித்துகளுக்கு கொடுக்கப்பட்ட மனைகள் அவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் கைக்கு மாறியிருக்கிறது'. தி ஹிந்து நாள் பிப்ரவரி ௧0, ௨0௧0

௨. சந்திரபூர் குல்லூர் கிராமம் அமராவதி தாலுகா மகாராஷ்டிரா மாநிலம், கிஷோர் பன்சொது என்பவரின் இரண்டரை ஏக்கர் நிலம் இந்த நாட்டின் முதல் குடிமகள் பிரதிபா பாட்டில் என்பவரின் கணவர் தேவி சிங் ஷெகாவத் என்பவரால் அபகரிக்கப்பட்டது. அவரது இருநூறு ஏக்கர் நிலத்திற்குள் நுழைய தடையாக இருந்த கிஷோர் என்ற தலித்தின் நிலமும் பிரதிபா பாட்டில் அவர்களின் கணவர் திரு ஷெகாவத்துக்கு வேண்டியிருந்திருக்கிறது.
என்று தணியும் இந்த கோர நிலப்பசி ?

கிஷொரிடம் அந்த நிலத்தை ஒப்படைக்க டர்யாபூர் உத்தரவிட்டபிறகும் கூட அவர் நீட்டி முழக்குகின்றார் நீதிமன்றம் திரும்ப அந்த இடத்தை அளக்கத்தான் சொல்லியிருக்கிறது. அவர் (கிஷொர்) விளம்பரத்திற்காக சொல்லுகிறார் என்று.

பெரியமனிதன் சொன்னால் பேப்பரில் போடுகிறான் சின்ன மனுஷன் சொன்னல் சிறையில் போடுகிறான் என்று கலைவாணர் என். எஸ்.கே சொன்னது எவ்வளவு சரியாகப்படுகிறது இந்த காலங்களில்.

வட்டிக்காரன் முதலாக நாட்டின் முதல் பெண்மணியின் கணவர் வரைக்கும் உண்டான ஆசைக்கு இலக்கு ஆகத்தகுதி பெற்றவன் இந்த நாட்டில் ஐந்தில் ஒரு பகுதியாக வாழும் தலித்துகளின் சொத்துக்கள் மட்டும்தானா என்ற கேள்வியை நாம் உரத்து எழுப்பியாக வேண்டிய காலம் என்றைக்கு கனியும் இந்த திருநாட்டில்?

பெரியார் பிறந்த இந்த மண்ணில் தான்
அண்ணாவின் பெயரால் எழுப்பப்படும் மறுமலர்ச்சி சுடுகாடுகள் கூட ஆதி திராவிடருக்கென்று ஒன்றும் (தலித்துகள் தான்)
மற்றவர்க்கென்று ஒன்றும் என்றும் கட்டப்படுகிறது.
இது போன்ற சமூக நீதிக்காவலர்கள் பிறக்காத பாக்கி தேசத்தில் எப்படி சமூக நீதி எதிர்பார்க்கமுடியும்?
"ஏழை என்றும் அடிமை என்றும் எவனுமில்லை சாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பார் இந்தியாவில் இல்லையே"
என்ற பாரதியை நினைவு கொள்வோம் இந்த நாட்களில்
வாழ்க பாரத மணித்திரு நாடு.

No comments: