வலைப்பதிவில் தேட...

Friday, September 7, 2012

வெல்லம் திங்கிறவன் ஒருத்தன் வெரல் சூப்புறவன் ஒருத்தன்

பேரா ச. மாடசாமியின் தொகுப்பான "சொலவடைகளும் சொன்னவர்களும்" என்ற அவரது" அருவி" பதிப்பகத்தின் வெளியீடாக வந்த புத்தகத்தின் ஒரு  "சொலவடை"தான் மேற் சொன்ன தலைப்பின் குறியீடு.
அநேகமாக நமது நாட்டில்" தும்பை விட்டு வாலைப்பிடிப்பது "என்பது கால காலமாக  நடந்தேறும் ஒரு நிகழ்வாக மாறி விட்டது  என்று சொன்னால் கூட சரியாக இருக்கும்.

சில நிகழ்வுகள்

1 தமிழன் ஆண்டி முத்து ராசாவின் 1,76,000 கோடி முறைகேடு சி ஏ ஜி
   அறிக்கை தொடர்பாக ஒரு வருடம் சிறை...

2  காமன் வெல்த் விளையாட்டில் விளையாடிய மராத்தியன்
     சுரேஷ்கல்மாதி தற்போது சிறையில்...

3  அதே விளையாட்டில் தலித்துகளுக்கென்று ஒதுக்கப்பட்ட ரூ 780 கோடியை   
     காமன் வெல்த் விளையாட்டுக்கென்றே ஒதுக்கிய பிராமண மகளின்
     முதல்வர் ஷீலா தீக்ஷித் அவர்களுடயது அவருக்கெதிராக எந்த
      சட்டமும் பாயவில்லை...

4 நிலக்கரி ஒதுக்கீட்டில் ரூ 1,86,000 கோடி பிரதம மந்திரியின்
    ஆலோசனையின் பேரில் தனியாருக்கு ஒதுக்கப்பட்டது என்ற  ஒரு
    குற்றச்சாட்டு அதில் அவரது மௌனம் நாடு போற்ற கடமைப்பட்டது...

5  தமிழகத்தில் கிரானைட் தோண்டி எடுக்கப்பட்டதில் அரசுக்கு சேர வேண்டிய
    ரூ 16,000  கோடி வரவில் வராமல் போனது ஒரு மாவட்ட ஆட்சியரால் திரு
    சகாயம் அவர்களது அறிக்கையின் பாற்பட்டது ( அவர் பிள்ளைமார்
    என்பதும்  உத்தப்புரம் தலித் மக்களுக்காக  சாக்கடை உள்ளிட்ட வசதிகள்
    செய்யாமல் விட்டபோதும் கூட)

 நிற்க...  நாம் நமது புரிதலின் அடிப்படையில் சொல்வதெல்லாம் இதுதான் ...

பூமியின் அடியில் கண்ட அனைத்து சொத்துக்களும் அரசாங்கத்துக்கே சொந்தம் என்ற தூய நடை முறை.

அரசாங்கம் என்பது  நிரந்தரமானது அதாவது போலீஸ், கோர்ட், ராணுவம்

,இத்யாதி இத்யாதி...


 விடுங்கள்...

ஒரு வேலையை செய்ய ஒருவருக்கு உத்தரவிடும் முன் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகள் என்பது தெள்ளத்தெளிவாக ஏற்கனவெ வரையறுக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு அம்சம்.

அதைத்தான் நாம் நமது அரசியலமைப்புச்சட்டம் என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.சரி... கிடக்கட்டும்...

ஆவன்னா ராசாவிற்கு உதவி செய்ததாகக்கருதப்படும் ப சி  எந்தவித குற்ற  உணர்ச்சியும் இல்லாமல் உள்துறையிலிருந்து  நிதியமைச்சராகத்தொடர்கிறார். இவர்தான் ஃபேர்ஃபாக்ஸ் ஊழலில் தனது மந்திரி பதவியை ராஜினாமாச் செய்தவர் என்பதை நினைவிற்கொள்(ல்)வோம்.

(மறதி என்பது மக்களின் இயல்பு ... நினைவு படுத்திக்கொண்டே இருப்பது நமது வேலை- எரிக் ஹோப்ஸ்வோம்) 

எனக்கு விபரம் தெரிந்த  நாள் முதல் ஒலிம்பிக் கமிட்டி இந்தியாவின் ஆகப்பெரும்புள்ளி சுரேஷ் கல்மாதிதான். அவரது செயல்பாடுகள் காமன் வெல்த் விளையாட்டுகளில் விபரீதமானதால் இன்று கம்பிக்குள் என் செய்ய காங்கிரஸ் என்ற பேரியக்கம் நிலைக்க வேண்டுமே அதனால் அவர்  பலிகடா ஆக்கப்பட்டார்.

ராகுல் காந்தியும் சோனியாகாந்தியும்  (போஃபார்ஸ் பணம் ஸ்விஸ் வங்கியில்)  இந்த வகையில் வரையறுக்க்கப்படவில்லை..

காமன் வெல்த் விளையாட்டில் தலித்துகளுக்கென்று ஒதுக்கப்பட்ட
 ரூபாய் 780 கோடியை விளையாட்டுக்கென்று ஒதுக்கிய பிராமணத்தி மீதி எந்த வழக்கோ எந்த விதி மீறலோ இல்லை விடுங்கள் கழுதையை...

முக்கியமாக பிரதமர் அலுவலகம் எந்த வித ஏல முறைகளையும் நடைமுறைப்படுத்தாமல் மா நிலங்களுக்கு அவர்களின் வேண்டுதலுக்கேற்ப தனியாருக்கு நிலக்கரி வெட்டி எடுக்க நில ஒதுக்கீடு ( நிலக்கரி வெட்டி எடுக்கத்தான்) செய்ததுதான்.

ஆனாலும் நான் எந்த வித களங்கமும் அற்றவன் என்று சொல்லிக்கொண்டு அமைதி ஆயிரம் வசனங்களுக்கும் மேலானது என சொல்லிக்கொண்டும், ரிசர்வ் வங்கி கவர்னர் பென்ஷன் மற்றும் உலக வங்கி பென்ஷன் பிரதமராக ஐந்தாண்டு இருந்ததற்காக பென்ஷன் என வாங்கிக்கொண்டு இந்த நாட்டில் திரிய முடியமா என்பது நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்தான்...

தமிழகத்தின் கிரானைட் மோசடியாக சித்தரிக்கப்படும் பழனிச்சாமி தற்போது சிறைக்க்கம்பிகளுக்கு அப்பால்....

இருபது வருடங்களால அவருக்கு சேவகம் புரிந்த வருவாய்த்துறை, கனிமவளத்துறை, காசுகளால் தங்களது வீடுகளுக்கு கிரானைட் பதித்த கொடுமையை எங்கே பதிவு செய்ய...


இன்றைக்கு புகார் கொடுக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளும் போலீஸ் குடிமனைக்காக கதறுபவர்களும் இன்றைய மத்திய மந்திரியின் மகன் கண்ணசைவில் வாழ்வு புரிந்தவர்களும் நாட்டு மக்களுக்கென்று என்ன செய்தி  வைத்திருக்கிறார்கள்...


எங்கே கோளாறு வருகிறது...

எல்லாவற்றையும் நடை முறைப்படுத்தி விட்டு  எனக்குத்தெரியாது என்பதில்தான் ...

நாமும் எத்தனைக்காலம்தான் இதைக்கேட்டுக்கொண்டே இருப்பது...


மிகவும் "போர்" அடிக்கிறது...

2 comments:

தருமி said...

//மிகவும் "போர்" அடிக்கிறது...//

அவ்வப்போது வலிக்கவும் செய்கிறது!

அழகிய நாட்கள் said...

தங்களது வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு நன்றி...