வலைப்பதிவில் தேட...

Monday, May 16, 2011

எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி?

1991இல் முதன் முதலாக ஜெயலலிதா ஜானகி அணியை ஒன்றிணைத்து இரட்டை இலையைத்தக்க வைத்து தமிழகத்தின் முதல்வரானார். 1996 இல் அவரது அராஜக பகட்டான கட்அவுட் கலாச்சாரத்தினாலும், சக மனிதனை மதிக்காத போக்கினாலும், சனாதன தர்மத்தைக்காக்கும் விதமாக முரளி மனோகர் ஜோஷியின் வழியில்  சமஸ்கிருதம் மற்றும் வேத பாடசாலைகள் அமைப்போம் என திராவிட கட்சித்தலைமை கொண்ட ஜெ சனாதன தர்மத்தை மேற்கொள்ள எத்தனித்தார். விளைவாக  தமிழக மக்கள் அவருக்கு ஓய்வு கொடுத்தனர்.


1996இல் மீண்டும் மூன்றாவது முறையாக முதல்வரானார். காரணம் என்னவென்றால் அந்த அம்மையார் இல்லைஎன்றால் கருணா நிதி என்ற புரிதல் தான். இவரும் ஒரு ஐந்து ஆண்டு காலம் ஆண்டார் இவர் உழவர் சந்தையில் காய் கறிகள் விற்க ஆணையிட .மருமகன் மாறன் உலகவங்கியில் இந்தியாவை அடமானம் வைக்க தொழிலாளர் துறை மந்திரியாக இருந்து சாதித்தார். ஊடுதட்டில் மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட சன் தொலைக்காட்சிக்கு அவரால் ஆன டெல்லி முயற்சிகள் நிறைவேற கருணா நிதியால் மா நில அளவிலான உதவிகள் தொடர கலா நிதி மிகப்பெரும் புள்ளியாக வழி வகுத்தார் ஆனாலும் மக்கள் பிரச்சனைகளில் எந்த மாற்றமும் இல்லை காங்கிரசின் அடி வருடியாக பாரதீய ஜனதாவுக்கு எப்படி இருந்தாரோ அதே அளவு கோலை காங்கிரசுக்கும் கடைப்பபிடித்தார்கள். ஒரு ஐந்து ஆண்டுகள்தாம்.


2001இல் அவரது கோட்பாடுகள் சரியில்லை என்று சனங்கள் முடிவு செய்து மீண்டும் ஜெயாவை ஆட்சியில் உட்கார வைத்தார்கள்.
அரசாங்க ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் 95% என்று தவறான புள்ளி விபரங்களை அள்ளி வீசினார். ஒரே உத்தரவில் 1,76,000 ஊழியர்களை பதவி நீக்கம் செய்தார் ( ராசாவின் ரூபாய் 1,76,000 கோடி 2 ஜி ஊழல் போலத்தான் இதுவும். அவர்கள் மனிதர்கள் இவைகள் ரூபாய்கள்). அட்டவணை சாதியினர், பழங்குடி மக்கள் மதம் மாறக்கூடாது என்று இரும்புச்சட்டம் இயற்றி இந்துத்துவா மோதியையே மிரட்டினார். பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் காலகாலமாக தங்கள் விளைச்சலைக்கொண்டாடும் விதமாக இருந்த குலதெய்வங்களுக்கு ஆடு கோழி பலியிடுவது என்ற பரம்பரைப்பழக்கத்திற்கு வேட்டு வைக்கும் விதமாக சட்டங்கள் இயற்றினார்.


2006: நமது மக்களுக்கு வேறு யாரையுமே தெரியாது மீண்டும் கருணா நிதியை
மீண்டும் முதல்வராக்கினார்கள். இலவச டிவிதான், ஒரு ரூபாய் அரிசிதான் ( அதை வாங்க அரசு செலவிடுவது என்னவோ 5 ரூபாய்தான்) அரசு கேபிள் அறிவிப்புதான் திருமங்கலம் ஜெயிப்புதான் , மானாட மயிலாடதான், மூன்று பகாசுர படக்கம்பெனிகள்தான் குடும்பத்தினர் ஐவர் உயர்மட்டக்குழுவில் உறுப்பினர்தான் அவர்கள் அனைவரும் முக்கியப்பதவிகள் தான் ( என் வி கே சம்பத், கே ஏ மதியழகன், அண்ணா, நெடுஞ்செழியன், என் வி  நடராசன் என்ற ஐவர் எல்லாம் அந்தக்காலம்....) கழகமே குடும்பம் குடும்பமே கழகம்தான். மணற்கொள்ளைதான், கற்கொள்ளைதான், மின் வெட்டுதான், விலைவாசி உயர்வுதான், ஆட்சியிலிருந்தும் தட்டிக்கேட்க முடியாத பெட்ரோல் உயர்வுதான், உலகத்தமிழ் மா நாடென்ன செம்மொழி மாநாடுதான் என்று கலக்கி விட்டார் அனைத்து மனிதனிடத்திலும் ஏதேனும் ஒரு விதத்தில் உள்ளிருக்கிற கலைஞன் என்ற அனைத்துத்திறமைகளையும் ஒரு முகக்ப்படுத்தி தனது பெயருக்கு அதை உரித்தாக்கிக்கொண்ட "கலைஞர்" கருணாநிதி.


இப்போது மிகவும் நல்லவராகிப்போனார் ஜெயலலிதா. என்ன செய்ய இனி ஒரு ஐந்து ஆண்டுகாலத்தை சுவைக்க தமிழக மக்கள் ஒருமித்து வாக்களித்து இருக்கிறார்கள். மூன்றாவது முறையாக மோடி வந்திருக்கிறார். திராவிட இயக்கத்தில் கலப்படமற்ற இந்துத்துவா, ரூபாய்  2 கோடி உள்ளிட்ட செட்டிங்ஸ் உட்பட சுமார் 1000 கோடி செலவில்  மக்கள் பணத்தில் அவர் கட்டியதால்  அது வேண்டாமென்று மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையாம்.


பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி தரப்பட்ட மின்சாரம், இடம், நீர், தொழிற்சங்க உரிமை பறிப்பு  இவற்றில் எந்த முன்னேற்ற நடவடிக்கையாவது இருக்குமா? தெரியவில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் நான் எனது என்ற திருவிளையாடல் முருகனின் வசங்கள் மீண்டும் ஒலிக்கும்.

எப்படி இருந்தாலும் கடந்த ஐந்து வருடங்களில்  ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் எம் எல் ஏக்கள் என்று எந்தப்பாகுபாடும் இல்லாமல்  அநேகமாக ஏதேனும் ஒன்று அல்லது ஐந்தாறு வரையிலும் கூட எங்ஜினீரிங் கல்லூரிகள், குறைந்த பட்ச எண்ணிக்கை அளவிலான  மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என அவர்கள் ஐந்தாண்டுகளுக்கு உழைக்க வேண்டிய நிலையங்கள் நிறைய கைவசம் இருக்கிறது.  அம்மாவின் ஆட்சி முடியும் வரை பொறுமை காத்தால் போதும்  மீண்டும் அவர்கள் கைகளுக்கே அனைத்து அதிகாரங்களையும் திரும்பவும் ஒப்படைக்க தமிழக மக்கள் தயாராக இருப்பார்கள். 1991 தொடங்கி ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் இதுதானே நடை முறையாகி இருக்கிறது.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்பார் பாரதியார்.
நாமும் அப்படியே இருப்போமா?

3 comments:

பனித்துளி சங்கர் said...

வேறு வழி தெரியவில்லை தமிழக மக்களான நமக்கு

Rathnavel Natarajan said...

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்பார் பாரதியார்.
நாமும் அப்படியே இருப்போமா


நல்ல பதிவு - வாழ்த்துக்கள்.

அழகிய நாட்கள் said...

திரு பனித்துளி சங்கர்!
"மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்" என்ற திரைப்படப்பாடலில் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம்.

திரு ரத்தினவேல்!
தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.