வலைப்பதிவில் தேட...

Monday, August 30, 2010

கோத்ரா நாட்கள் 3

ஆமதாபாத்தும், பரோடாவும் கோத்ரா ரயில் எரிப்பின் (58 பேர் ரயில் எரிப்பில் சாம்பலானார்கள்) பின்னணியில் மனித உயிர்களின் கருகல் புகை மண்டலத்தில் ( சுமார் இரண்டாயிரம் பேர் வரை படுகொலை செய்யப்பட்டனர்) மிதந்து கொண்டிருந்த நேரம் அது.
பரோடாவில் (வடோதரா என்பது தற்போதைய பெயர்)  முக்கிய வீதியில் இருந்த ஒரு மசூதிகூட
(தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அது வரை இருந்து வந்தது) இடிக்கப்பட்டது.

நான் கோத்ராவில் மொத்தம் வாழ்ந்திருந்த இரண்டரை ஆண்டுகளில் எட்டு முறை விருது நகருக்கு வந்து போய் இருந்திருக்கிறேன்.
பரோடா ரயில் நிலையம் இருப்பது மகாராஜா சாயாஜிராவ் (MS UNIVERSITY)பல்கலைக்கழகத்தின் எதிரில். அண்ணல் அம்பேத்கர் பணியாற்றிய பெருமையுடையது. சிறந்த கல்விமானாகிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குப்பணி செய்ய நியமிக்கப்பட்ட ஒரு சாதி வெறியனால்   குடிக்ககூட தண்ணீர் மொண்டு கொடுக்க/ கோப்புகளைத்தூக்கிச்செல்ல மறுத்த காரணத்தால்குறைந்த காலத்தில் இந்தப்பல்கலைக்கழகத்தினின்றும் வெளியேறி மறுபடியும் பம்பாய் ( 1995 முதல் மும்பை) சென்று குடியேறினார் என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இந்துத்துவா பரிசோதனைக்கூடமாக மோடி குஜராத்தை மாற்றியமைக்க முடிவெடுத்தன் பின்னணியில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு எம் எஸ் பல்கலைக்கழகப்பேராசிரியர் பணிக்கர் இந்துத்துவா ஆட்களால் தாக்கப்பட்டார் என்பதை நாம் அறிவோம் பணிக்கர் அவர்களது   மாணவர்களது ஓவியங்களுக்காகவும் அதில் உள்ள உணர்வுகள் மதககோட்பாடு ரீதியாகவும் தங்களை புண்படுத்துவதாகவும் முடிவெடுத்தடன் விளைவாக இந்தக்கொடுமை நடந்தேறியது. கோத்ராவுக்கும் பரோடாவுக்கும் 75 கி மீ தூரம்.  ஒன்றரை மணி நேர ரயில்/பேருந்து பயணம்.

மதக்கலவர நாட்களில் ஒரு முறை இப்படித்தான் விருது  நகருக்கு கிளம்பி வர ஒரு முறை நேர்ந்தது. அவ்வப்போது விடுமுறையில் எட்டுநாட்கள் வந்து விட்டுப் போவதை பாப்பா "எப்போப்ப முழுசா வருவீங்க" என்று கேட்டது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இரவு  பத்து மணிக்கு கோத்ராவிலிந்து புறப்பட்டு பரோடா பஸ் ஸ்டேஷன்  சேர்ந்தேன்.   பனிரெண்டு மணியளவில் ரயில்  நிலையம் இரண்டாம் வகுப்பு தங்கும் அறைக்கு சென்றேன். (திரு நெல்வேலியில் ஜங்க்ஷனுக்கு பக்கத்தில் பஸ்  நிலையம் இருப்பதுபோல்தான் பரோடாவிலும்  ஜங்க்ஷனுக்கு எதிரில்  பஸ்  நிலையம் இருக்கிறது)

டிக்கெட் பரிசோதகர்  வ ந்து டிக்கெட்கேட்டார்.நான் பேருந்தில் வந்த விபரம் சொன்னேன். ரயில் டிக்கெட் கேட்டார். காலை எட்டரை  மணிக்கு செல்லவேண்டிய  நவ ஜீவனின் டிக்கட்டை காண்பத்தேன். வெளியே போக ஆணையிட்டார். பெட்டியோடு வாசலுக்கு வந்தேன். எம் எஸ் பல்லைக்கழக நுண்கலை மாணவர்கள் சிலர் லைவ் ஒவியங்களுக்காக சிரத்தை எடுத்துக்கொண்டிருந்தார்கள். பலர்  விடுதிக்கு சென்று விட்டார்கள் போல.

என்னைப்போலவே விரட்டப்பட்டவர்கள்   நிறை ந்து கிடந்தார்கள். ஆட்டோக்காரர்கள் பிச்சைக்காரர்கள் பயணத்திற்கு காத்திருப்பவர்கள் என விழித்திருக்கும் மதுரை போல பரோடா ஸ்டேஷன் மின்னியது.
உட்கார்ந்து கொண்டேதூங்க முயற்சித்தேன்
இரணடு மணி ஆகியது
மணி மூன்றைக்கடந்தது
கண்கள் செருகின
துணி மணி அடங்கிய பெட்டி பறி போய்விடுமோ என்ற பயம வேறு என்னைத் தொல்லைப்படுத்தியது.  பெட்டியில்  கை வை த்து அப்படியே தலைசாய்த்து நன்றாக அசந்திருப்பேன் மணி  ஐந்தரை.  சந்த டி அதிகமானது. கண்கள்
நெரு  நெரு வென எரிச்சலுடன்.
பெட்டியைத்தூக்கிக்கொண்டுமீண்டும் இரண்டாவது வகுப்பு வெயிட்டிங்க ஹாலுக்குப் போனேன் முகத்தைக்ழுவ.
டிககெட்
செக்கர் யாரும் இல்லை.

2 comments:

இனிய தமிழ் said...

முலாம் பூசப்பட்ட இந்திய ஜனநாயகத்தில் இன்னும் எவ்வளவோ ஆறாத தழும்புகள்....

அழகிய நாட்கள் said...

இனிய தமிழ்!

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி !