வலைப்பதிவில் தேட...

Wednesday, July 27, 2011

எனது நிழற்படங்கள்

1976ஆம் ஆண்டு எஸ் எஸ் எல் சி தேர்வில் 459 மதிப்பெண்கள் 600க்கு எடுத்து விருது நகர் ஹாஜி பி செய்யது முகமது உயர் நிலைப்பள்ளியில் பள்ளியிலேயே இரண்டாவதாகத்தேறினேன். விருப்பப்பாடம் வேதியியல் (அன்றைக்கு ரசாயனம்)95 மதிப்பெண் பெற்று பள்ளி முதலாமிடம். 76.5% மார்க்குகள்.

எனது சாதனையாளருடன் ஒரு நாள் பதிவில் குறிப்பிட்ட  திரு வீரபாண்டியன் ஐ ஏ எஸ் அவர்களது பேட்டி 2000 ஆம் வருடம்  வெளி வந்தது அவர் சொன்னார் நான் ஐ ஏ எஸ் ஆக விரும்புகிறேன் என்று. அவர் மேனிலை முடித்த கையோடு வந்த அந்த பத்திரிகைசெய்தியைப்போல நான்  எஸ் எஸ் எல் சி படித்து முடித்தபோது ஒரு செய்தி ஹிந்து நாளிதழில் 10/09/1976 அன்று வெளி வந்தது. அப்போது என் அப்பாவின் ஆசையாக ஒன்றைக்குறிப்பிட்டார். எனது பையன் மருத்துவராக ஆகி ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

1977 இல் விருது நகர் இந்து நாடார்களுக்குப்பாத்தியமான செந்திக்குமார நாடார் கல்லூரியில் புகு முக வகுப்பில் சேர்ந்து 1000க்கு 582மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் வகுப்பில் தேர்வாகி மதுரை மருத்துவக்கல்லூரியில் இண்டர்வியு வரை சென்று வந்ததோடு சரி. அப்போது சிவசாமி என்றொரு கல்லூரி முதல்வர் இருந்தார். அப்போது மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த திரு எஸ் வி சிட்டி பாபு அவர்களுக்கு உறவினர். என்னைப்பார்த்து சில புத்தகங்கள் பேனா பரிசளித்து ரூபாய் 15 விலையில் ஒரு அழகான சேம்பர்ஸ் ஆங்கிலம்-ஆங்கிலம் அகராதியும் கொடுத்தார். அவரது ஆலோசனையின் படி இளமறிவியல் தாவரவியலில் சேர்ந்தேன். எனது புகுமுக வகுப்பு அடையாள அட்டையின் புகைப்படம்:
தாவரவியலில் என்னை சேரச்சொன்னதன் காரணம் இதுதான். என்னால் புத்தகங்கள் விலைக்கு வாங்க முடியாது அதற்கான வசதி இல்லை. தாவரவியில் என்றால் வேண்டுமென்கிற புத்தகங்களை கல்லூரி நூலகத்திலிருந்து  பெற்று படித்துக்கொள்ளலாம் என்பதுதான். அப்படியே ஆகக்கடந்தன நாட்கள்.  1800க்கு 1250 மதிப்பெண்கள் பெற்று (76.5%) முதலாம் வகுப்பில் இளமறிவியல் பட்டம் பெற்றேன்.  தொலைத்தொடர்பு இலாகாவில் எழுத்தர் வேலை கிடைத்தது.  எனது 90 ஆண்டின் புகைப்படம்
பாரத் கியான் விக்ஞன் சமிதியின் சார்பில் நடை பெற்ற எழுத்தறிவுக்கலைப்பயணம் (1990 அக் 2 ஆரம்பித்து 1990 நவ் 14ல் முடித்தோம்) 1991 ஜனவரியில் படிக்க ஆரம்பித்து 1994 ஆம் ஆண்டு கணக்கியல் அதிகாரியாகத்தேர்வாகி (அக்கவுண்டன்சி பாடம் படித்து இலாகா விதி முறைகள் தேர்வு 11 தாள்கள் எழுதி பிறகு) மும்பையில் ஒராண்டு சென்னையில் ஓராண்டு என்று பணிமுடித்து பிறகு விருது நகரில் சேவை செய்த நேரம். தாய்த்தமிழ் பள்ளிகளுக்கான ஒரு அறைகூவல் விடுத்தது தினமணி நாளிதழ். அப்போது எனது தம்பி மாதவனுக்குக்கல்யாணம் (05/02/1999) அந்த நேரத்தில் கல்யாண  நிகழ்வின் நினைவாக ஒரு 501/- ரூபாய் அனுப்பி வைத்தேன். அதன் அசல் .


 அடுத்த பதவி உயர்வில் குஜராத் மாநிலம் கோத்ராவில் ஒரு இரண்டரை ஆண்டுப்பணி கோத்ராவில் எனது படம்

இன்றைய தினத்தின் இப்படியாக நான்

காதோரம் நரைச்ச முடி கதை முடிவைக்காட்டுது என்பார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

காதோரம்  நரைக்க ஆரம்பித்து விட்டது. ஆனாலும் வாழ வேண்டும் எழுத வேண்டும் பகிர வேண்டும் என்ற ஆசை இன்னும் நிறைய்ய்ய்ய  இருக்கிறது.

No comments: