வலைப்பதிவில் தேட...

Sunday, October 11, 2009

சண்டாளன்



வடிவேலு என் கிற நடிகர் காமெடி செய்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட சாதியைத்திட்டுவது என்பதை நோக்கமாககொண்டிருக்கிறார். அல்லது கொண்டிருந்தார். நிறையப்படங்களில் அந்த வசனத்தை உச்சரித்து கைதட்டலை வாங்கிக்கொண்டிருக்கிறார் இன்னமும் கூட். நம்மை அறியாமல் நாமும் கூட மனம் விட்டு சிரித்திருப்போம்.

உண்மையில் அது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல வேதனைப்படவேண்டிய அம்சம்  நாம் அனைவரும் எந்த வகையில் பார்த்தாலும்.
ஆனால் சமீபத்தில் சென்சார் போர்டுக்காரர்கள் அந்த வசன உச்சரிப்பை தவிர்த்துவிடுங்கள் என்று கூறியதாக ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. அவர் அந்த உச்சரிப்பில் பேசி நடித்தாலும் கூட இவர்கள்  "MUTE" செய்து விடுவார்கள் அவ்வளவுதான்.

தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர்  திரு கருணா நிதி அவர்கள் கூட ஒருமுறை அந்த வார்த்தையை உச்சரித்து வாபஸ் வாங்காமலே இருந்து கொண்டார்.

தங்கத்தமிழ் நாட்டில் 18 சதமான மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுடைய சாதி எண்ணிக்கை ஆக மொத்தம் 76. அதில் 15 ஆவதாக பட்டியலிடப்பட்டிருப்பது "சண்டாளா" என்பது.
தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களின் சாதியின் பெயரால் திட்டுவது என்பது தடை செய்ய்யப்பட்டிருக்கிறது. அது ஒரு வகை வன் கொடுமை.

தலித்துகளுக்கு எதிரான வன் கொடுமை ஒழிப்புச்சட்டம் 1989 ன் படி அப்படி சாதியைசொல்லித்திட்டியவர்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்ப்டுவார்கள்.

ஆனால் காமெடியன்  வடிவேலுவோ அல்லது இந்த அவச்சொல்லை உச்சரித்த வேறு எந்த முக்கியப்புள்ளியோ இப்படியான எந்த நடவடிக்கைக்கும் ஆளாக வில்லை.

காரணம் தலித் மக்களிடையே கல்வியறிவு மற்றும் விழிப்புணர்ச்சி இல்லாத நிலைமைதான். எப்படியோ கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தலித் அருந்ததியர் என்ற மிகவும் கீழ் நிலையில் இருப்பவர்களுக்கான போராட்டம் இடது சாரிகளால் எடுக்கப்பட்டதினால் சென்சார் போர்டுக்காரர்கள் சுதாரித்துக்கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை.

தற்சமயம் அந்தத வார்த்தையை உச்சரித்து திட்டுவது தடை செய்யப்பட்டிருப்பது தலித் மக்களையும் அவர்கள் மனிதர்களாகப்பார்க்கத் துவங்கி இருப்பதைக்காட்டுகிறது. வசனம் நம் காதில் விழாத அளவுக்கு அதை MUTE செய்து விடுகிறார்கள்.

அது சரி. இது வரை அவர் சொன்ன அந்த வார்த்தைகள் பல்வேறு திரைப்படங்களில்பதிவுகளாக நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமாக காமெடிக்காட்சிகளில் உலா வந்து கொண்டிருக்கிறதே அதை ஒன்றுமே செய்ய முடியாதா?

No comments: