வலைப்பதிவில் தேட...

Friday, April 17, 2009

அம்பேத்கர் பிறந்த நாள்



நண்பர்களே

நான் ஒரு தலித் என்பது எனக்கு விபரம் தெரியும் வரை நிச்சயமாக தெரியாது. அப்பா ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளி . ஆசை ஆசையாக எனது அம்மாவோடு புணர்ந்து தான் என்னையும் மற்றவரைப்போல் எனது அப்பா என்னை உருவாக்கியிருப்பார் . பெயர் வைத்திருப்பார் பாராட்டியிருப்பார் சீராட்டியிருப்பார் எனது அம்மாவும் கூடவேதான் எப்படி கொஞ்சியிருப்பார்கள் என்னை. என் பெயரோ நாராயணன் போதாதா நான் ஒரு ஹிந்து என்பதற்கும் படி நிலை சமூகத்தின் அங்கம் என்பதற்கும் சாட்சிதான் வேண்டுமோ என்ன. ஹிந்துவாக இருக்க வேண்டும் பிறகு தாழ்ந்த ஒரு தொழிலை செய்ய வேண்டும். அவன் நிச்சயம் தலித்துதான்.

அறிவர் அம்பேத்கர் பிறந்த நாள் கூட்டத்திற்கு போய்இருந்தேன் . என்னை பேச சொல்லி அன்புக்கட்டளை இட்டார்கள் நண்பர்கள். அந்த கூட்டத்திற்கு மொட்டை அடித்த ஒரு நண்பர் வந்திருந்தார். நான் அம்பேத்கர் அவர்களின் கொள்கைப்படி நான் இந்துவாகப்பிரந்தேன் இந்துவாக இறக்கமாட்டேன் என்று சபதம் பூண்டு இருபது ஆண்டு காலம் யோசித்து இறுதியில் புத்த மதத்துக்கு மாறினார் ஆகவே நாம் இந்து மதத்தில் இருப்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும் இன்னும் நாம் மொட்டை அடித்துக்கொண்டு இருக்ககூடாது . கடவுள் நம்பிக்கையிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற கருத்து பதியம்படியாகவும் மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி பிராமணர்களையும் ஒன்றிணைத்து மாபெரும் கூட்டணியாக உத்திரப்பிரதேசத்தில் உருவாக்கியிருக்கிறார் . அந்த வழியை பின் பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினேன் .

தலித்துகளை அரசின் பிராமணர்கள் என்று விளித்தது போக தலித் தலைவியான மாயாவதி ஒரு பிராமணரை தனது செயலாளராக வைத்துக்கொண்டு ஏழை பிராமணருக்கும் இட ஒதுக்கீடு உண்டு என்று அறிவிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார் ஆனால் நாமோ குறிப்பாக தமிழகத்தில் பல்லன் பறையன் சக்கிலியன் குறவன் புதிரைவண்ணன் என பிரிந்து கிடக்கிறோம் குறைந்த பட்சம் இந்த உட்பிரிவுகளை களைந்து விட்டு ஒற்றுமை காக்க கிளர்ந்தேளுவோம் என்றும் குறிப்பிட்டேன் .

மறு நாள் தொலைபேசியில் ஒரு அன்பர் அழைத்தார் . நீங்கள் பேசியது உங்களுக்கே சரியா என்றார். கடவுளை மறுத்து பேசியது முறையாகுமா என்று வினா தொடுத்தார். பெரியாரும் அம்பேத்கரும் அவரது குருவான ஜோதிராவ் புலேயும் தமிழகத்தின் முதல் போதுவுடமைவாதியுமான சிங்காரவேலரும் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை அண்ணலுடைய பிறந்த நாளில் கூட இன்னும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை நமது சிதறுண்ட மக்கள் (தலித்) நான்கில் ஒரு பகுதி மக்களின் இழி நிலை தீர்க்க இன்னும் எத்தனை காலம் தான் காத்திருக்க வேண்டுமோ


எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
என் மக்களுக்கு ஏன் இன்னும புரிய
வைக்க மாட்டாயோ

என நான் இறைவனை அல்ல அறிவை கேட்டேன்.

No comments: