வலைப்பதிவில் தேட...

Saturday, April 17, 2010

சாம் பிட்ரோடா குழுவின் அறிக்கை


சாம் பிட்ரோடா என்ற ஒருவரின் தலைமையில் இந்த வருட ஆரம்பத்தில் அரசு நிறுவனமான' பி எஸ் என் எல்' லின் நிதி ஆதாரம் மற்றும் அதனை லாபத்தில் இயங்க வைப்பதற்கான வழி முறைகளை ஆராய பிரதம மந்திரியின் ஆலோசனையின் பேரில் ஒரு குழு (கமிஷன் அல்லது கமிட்டி என்றும் கொள்ளலாம்) ஜனவரி ஆறாம் தேதி அமைக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் செயல்பட்டு பிப்ரவரி ஒன்பதாம் தேதி அதனுடைய பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பித்தது.

நேரு காலத்தில் இருந்து சுதந்திர இந்தியாவில் ஏகப்பட்ட கமிட்டிகள், கமிஷன்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. எந்தக்குழுவும் இவ்வளவு விரைவாக அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

யோத்தியில் பாபர் மசூதி தொண்ணூற்றி இரண்டாம் வருடம் டிசம்பர் ஆறாம் தேதி இடிக்கக்ப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அதனை விசாரிப்பதற்காக லிபரான் கமிஷன் பத்து நாட்கள் கழித்து டிசம்பர் பதினாறாம் தேதி அமைக்கப்பட்டது. மூன்று மாத காலத்திற்குள் அதன் அறிக்கையை சமர்ப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

ஆனால் நாற்பத்தெட்டு முறை மட்டுமே நீட்டிப்பு கொடுக்கப்பட்டது.

அறிக்கை சமர்ப்பிக்க பதினேழு ஆண்டுகள் மட்டும் எடுத்துக்கொண்டது.

குழுவிற்கு ஆன செலவு வெறும் எட்டு கோடிதான்.

றிக்கையின் முடிவின் அடிப்படையில் பரிந்துரைகள் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு மூன்று அரசியல் தலைவர்களுக்கு ( அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யான் சிங், உமா பாரதி உள்ளிட்ட விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சிலருக்கு..) பொது அமைதியைக்கெடுத்த வகையில் அதிகபட்சமாக 'ஜெயில் தண்டனை' (எவ்வளவு நாட்களுக்கு என்று தெரியாது...) விதிக்கப்படலாம். அல்லது அதை வழங்கும் முன்னதாவே அவர்கள் இயற்கை மரணம் காரணமாக மரணமடைந்தும் போகலாம் 'ஹர்ஷத் மேத்தாவைப்போல'. அது இருக்கட்டும்...

பிட்ரோடா கமிட்டியின் பரிந்துரைகளில் ஒன்று பி எஸ் என் எல் நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று லட்சம் ஊழியர்களில் ஒரு லட்சம் பேரை (அதாவது மூன்றில் ஒரு பகுதியினரை)வி ஆர் எஸ் திட்டத்தில் வீட்டுக்கு அனுப்புவது என்பது.

மூன்று நான்கு அரசியல்வாதிகளுக்கு ஜெயில் தண்டனை கொடுப்பதற்காக போடப்பட்ட லிபரான் குழு எடுத்துக்கொண்டதைப்போல் பதினேழரை ஆண்டு கால நீண்ட நெடிய அவகாசம் வேண்டாம். அதில் பாதி அதாவது ஒரு எட்டரை ஆண்டுகள் பிட்ரோடா எடுத்துக்கொண்டிருந்தாலே போதும். பிட்ரோடா அறிக்கையில் சொன்னதற்கும் மேலாக அதாவது ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ஊழியர்கள் பணி நிறைவில் தானாகவே சென்று விடுவார்கள். லிபரான் கமிஷன் எடுத்துகொண்டதைப்போல் பதினேழு ஆண்டுகள் கிட்டத்தட்ட மூன்று லக்ஷம் பேரில் இரண்டு லஷத்து பத்தாயிரம் பேர் பணி நிறைவில் வீட்டுக்கு சென்று விட்டிருப்பார்கள் |

தற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கடந்த இருபத்தாறு ஆண்டுகளுக்கு மேல் புதியதாக வேலைக்கு ஆள் எடுக்காமல் இருக்கும் ஆளெடுப்பு தடைச்சட்டம்.

ருகேள்விதான் எனக்கு தோன்றுகிறது.
லிபரான் கமிஷனில்
குற்றம் சாட்டப்பட்டவர்களின்
ஐந்தாறு பேரின் உயிர் என்ன வெல்லமா?
பி எஸ் என் எல் நிறுவனத்தில் பணி புரியும்
ஒருலஷம் ஊழியர்களின் உயிர் என்ன மயிரா?
என்னதான் கமிட்டியோ கமிஷனோ
குழுவோ விளக்கமாரோ?
பெரியாரின் பாணியில் சொன்னால்
என்ன வெங்காயமோ..........|


No comments: