வலைப்பதிவில் தேட...

Thursday, July 28, 2011

கோத்ராவிலிருந்து ஒரு குமுறல்

இரண்டரை வருட கோத்ரா வாழ்க்கை நிறைய நினைவுகளைக்கொண்டிருக்கிறது. 2002 ஆம் வருடம் அஜய் தேவ்கான் நடிப்பில் தெ லெஜெண்ட் ஆஃப் பகத்சிங்  என்ற ஒரு திரைக்காவியம் வெளியானது. நானும் எனது தம்பி போன்ற அருமை நண்பன் தீபக்கும் சென்று படம் பார்த்தோம். ராஜ் குமார் சந்தோஷின்  இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் அது ஒரு அற்புதமான படம். வரலாற்று நாயகர் வரிசைப்படம்.

அந்தப்படத்தைப்பார்த்து விட்டு ஒரு விமர்சனம் எழுதி தீக்கதிர் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். தோழர் எஸ் ஏ பி அவர்கள் மேற்கண்ட தலைப்பில் ஒரு கால் பக்கத்திற்கு வெளியிட்டு இருந்தார்( வெளியிடப்பட்ட நாள் 24/06/2002). அதனை இந்தப்பதிவில் இங்கே:

தெ லெஜெண்ட் ஆஃப் பகத்சிங் சமீபத்தில் வெளியான ஹிந்தித்திக்ரைப்படத்தின் பெயர் இது, அஜய் தேவ்கன் பகத்சிங்காகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கும் அற்புதமான நடிப்பு. இசைப்புயல் ஏ ஆர்  ரகுமானின் இசை. சந்தோஷின் இயக்கம். வரலாற்றுப்படம் என்பதால் அளந்து அளந்து ப்ரேம் செய்திருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் ஐந்து படங்கலள் பகத்சிங்கை மையமாக வைத்து இந்தித்திரை உலகம் படம்  எடுத்துக்கொண்டிருக்கிறது.
 மற்ற நான்கு படங்கள்
1931 மார்ச் 31- சாகித்- பாபி தியோல்- சன்னி தியோல் ( வெளி வந்து விட்டது)
பகத்சிங்- ப்ரேம் சாகர் தயாரிப்பில்
ஷாகீத் பகத் சின்க்- தருன் கண்ணா தயாரிப்பில்
ஷாகீத் இ ஆஜம்- சோனு சூட் தயாரிப்பில்
இந்த 5 படங்களும் 2002 இல் அதாவது பகத்சிங்கின்  பிறந்த நூற்றாண்டு
விழாவியைக்கொண்டாட இன்னும் 4 வருடங்கல் பக்கியிருக்கும் பொழுது வெளியாகி யிருக்கின்றன.

ஒரு புரட்சிக்காரனை மையமாக வைத்து இது வரை 8 திரைப்படங்கள் ல்தயாரிக்கப்பட்டு இருப்பது பகத்சிங் ஒருவருக்கு மட்டும்தன். "புரட்சிக்காரர்கள் புதைக்கப்படுவதில்லை; மாறாக விதைக்கப்படுகிறார்கள்" என பொன் மொழி பகத்சின்க் என்ற   மாவீரனின் வரலாற்றைத் திரைப்படமாக எடுத்துஹிந்தித்திரையுலகம் நமது சந்ததியினருக்கு படமாக(பாடமாக) ஆக்கியிருக்ககிறது.
சினிமா உலகில் ஹாலிவுட், அடுத்து பாலிவுட் . விட்டால் கோலிவுட். நமது தமிழ் சினிமாதான் பாலிவுட் தயாரிக்கும் படங்களின் எண்ணிக்கைக்கு ஏடாக சில நேரங்களின் கூடுதலாகவும் திரைப்படங்களை தயாரிக்கும்.  நமது கோலிவுட்டில் இது போன்ற வரலாற்று நாயகர்களுக்கென்று ஏதேனும் படம் எடுக்கக்ப்பட்டிருக்கிறதா என்று தேட வேண்டியிருக்கிறது. ஆம். பி. ஆர். பந்துலு வின் தயாரிப்பில் வெளியான "கப்பலோட்டிய தமிழன்" ,"வீரபாண்டிய கட்டபொம்மன்" மற்றும் கண்ணதாசன் தயாரிப்பில் வெளியான "சிவகங்கைச்சீமை". இவை தவிர "பாரதி"யைக்குறிப்பிடலாம்.


பகத்சிங்கைப்பற்றிய  முதல் திரைப்படம் இந்தியில் 1954 இல் அதாவது அவர் தூக்கிலிடப்பட்ட 23 வருடங்கள் கழித்து வெளியானது.
தமிழில் பாரதி படம் 2000 ஆம் ஆண்டு பாரதியின்  நூற்றாண்டு (1982) கழிந்து 18 வருடங்களுக்குப்பிறகு வெளி வந்தது.அந்த வகையில்  ஞான ராஜசேகரன்
( பாரதி பட இயக்குநர்) தமிழ்திரை உலகிற்கு முன்னத்தி ஏர் பிடித்திருக்கிறார். ஆனால் அதை அடியொற்ற எந்தத்தயாரிப்பாளரும் இயக்குநர்களும் தயாரில்லை. நாம் இன்று வரலாறு படிக்கிறோம்.
 சரி ஏற்கனவே வர்லாற்றைப்படைத்து விட்டுச்சென்றவர்களைப்பற்றீய பதிவு புத்தகங்களில் மட்டுமல்ல. திரையுலகிலும் பிரதிபலிக்க வேண்டும்.  மோகமுள் நாவலை படமாக்கிய் திரு ஞான ராஜ சேகரன் "பாரதியை இயக்கியது கூட ஒரு சவால் மூலம்தான். மலையாள ரசிகர் ஒருவரின் வேண்டுகோலை ஏற்று மராத்தி நாடகக்கலைஞனை (சாயாஜி ஷிண்டே) வைத்து எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம். வரலாற்றுக் கதா நாயகர்கள் என்று எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் இன்னும் மக்கள் மனதில் வாழ்பவர்கள் எத்தனை எத்தனை பேர்? வ உ சி, சுப்பிரமணிய சிவா வ வே சு ஐயர்,வைத்திய நாதைய்யர், வாஞ்சி நாதன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டி வீரன் அயோத்திதாசப்பண்டிதர், வேலு நாச்சியார், மருது இருவர், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களைத்தமிழ்த்திரையுலகம் பதிவு செயய தயாரவது எப்போது? சினிமா ஒரு சக்தி மிக்க சாதனம் என்றார் ரஷ்ய புரட்சித்தலைவர் லெனின்.




ஆனால் நம்மவர்கள் இன்னும் தாலி, அம்மா, தங்கை திவீரன், காதல் இப்படிப்பட்ட சென்டிமெண்டுகலிலும் இன்னும் ஆங்கிலப்பயர்களைத்தமிழ்த்திரைப்படங்கலளுக்கு சூட்டுவதிலுமே குறியாக இருக்கிறார்கள்.
இலக்கை மாற்றினால் இளைஞர்கள் திரைப்படத்தினின்றும் கூட பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை தமிழ்ப்பட நாயகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் புரிந்து கொள்ளும் காலம்தான் எப்போது?
திலிப் நாராயணன்
கோத்ரா
குஜராத்.

Wednesday, July 27, 2011

எனது நிழற்படங்கள்

1976ஆம் ஆண்டு எஸ் எஸ் எல் சி தேர்வில் 459 மதிப்பெண்கள் 600க்கு எடுத்து விருது நகர் ஹாஜி பி செய்யது முகமது உயர் நிலைப்பள்ளியில் பள்ளியிலேயே இரண்டாவதாகத்தேறினேன். விருப்பப்பாடம் வேதியியல் (அன்றைக்கு ரசாயனம்)95 மதிப்பெண் பெற்று பள்ளி முதலாமிடம். 76.5% மார்க்குகள்.

எனது சாதனையாளருடன் ஒரு நாள் பதிவில் குறிப்பிட்ட  திரு வீரபாண்டியன் ஐ ஏ எஸ் அவர்களது பேட்டி 2000 ஆம் வருடம்  வெளி வந்தது அவர் சொன்னார் நான் ஐ ஏ எஸ் ஆக விரும்புகிறேன் என்று. அவர் மேனிலை முடித்த கையோடு வந்த அந்த பத்திரிகைசெய்தியைப்போல நான்  எஸ் எஸ் எல் சி படித்து முடித்தபோது ஒரு செய்தி ஹிந்து நாளிதழில் 10/09/1976 அன்று வெளி வந்தது. அப்போது என் அப்பாவின் ஆசையாக ஒன்றைக்குறிப்பிட்டார். எனது பையன் மருத்துவராக ஆகி ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

1977 இல் விருது நகர் இந்து நாடார்களுக்குப்பாத்தியமான செந்திக்குமார நாடார் கல்லூரியில் புகு முக வகுப்பில் சேர்ந்து 1000க்கு 582மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் வகுப்பில் தேர்வாகி மதுரை மருத்துவக்கல்லூரியில் இண்டர்வியு வரை சென்று வந்ததோடு சரி. அப்போது சிவசாமி என்றொரு கல்லூரி முதல்வர் இருந்தார். அப்போது மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த திரு எஸ் வி சிட்டி பாபு அவர்களுக்கு உறவினர். என்னைப்பார்த்து சில புத்தகங்கள் பேனா பரிசளித்து ரூபாய் 15 விலையில் ஒரு அழகான சேம்பர்ஸ் ஆங்கிலம்-ஆங்கிலம் அகராதியும் கொடுத்தார். அவரது ஆலோசனையின் படி இளமறிவியல் தாவரவியலில் சேர்ந்தேன். எனது புகுமுக வகுப்பு அடையாள அட்டையின் புகைப்படம்:
தாவரவியலில் என்னை சேரச்சொன்னதன் காரணம் இதுதான். என்னால் புத்தகங்கள் விலைக்கு வாங்க முடியாது அதற்கான வசதி இல்லை. தாவரவியில் என்றால் வேண்டுமென்கிற புத்தகங்களை கல்லூரி நூலகத்திலிருந்து  பெற்று படித்துக்கொள்ளலாம் என்பதுதான். அப்படியே ஆகக்கடந்தன நாட்கள்.  1800க்கு 1250 மதிப்பெண்கள் பெற்று (76.5%) முதலாம் வகுப்பில் இளமறிவியல் பட்டம் பெற்றேன்.  தொலைத்தொடர்பு இலாகாவில் எழுத்தர் வேலை கிடைத்தது.  எனது 90 ஆண்டின் புகைப்படம்
பாரத் கியான் விக்ஞன் சமிதியின் சார்பில் நடை பெற்ற எழுத்தறிவுக்கலைப்பயணம் (1990 அக் 2 ஆரம்பித்து 1990 நவ் 14ல் முடித்தோம்) 1991 ஜனவரியில் படிக்க ஆரம்பித்து 1994 ஆம் ஆண்டு கணக்கியல் அதிகாரியாகத்தேர்வாகி (அக்கவுண்டன்சி பாடம் படித்து இலாகா விதி முறைகள் தேர்வு 11 தாள்கள் எழுதி பிறகு) மும்பையில் ஒராண்டு சென்னையில் ஓராண்டு என்று பணிமுடித்து பிறகு விருது நகரில் சேவை செய்த நேரம். தாய்த்தமிழ் பள்ளிகளுக்கான ஒரு அறைகூவல் விடுத்தது தினமணி நாளிதழ். அப்போது எனது தம்பி மாதவனுக்குக்கல்யாணம் (05/02/1999) அந்த நேரத்தில் கல்யாண  நிகழ்வின் நினைவாக ஒரு 501/- ரூபாய் அனுப்பி வைத்தேன். அதன் அசல் .


 அடுத்த பதவி உயர்வில் குஜராத் மாநிலம் கோத்ராவில் ஒரு இரண்டரை ஆண்டுப்பணி கோத்ராவில் எனது படம்

இன்றைய தினத்தின் இப்படியாக நான்

காதோரம் நரைச்ச முடி கதை முடிவைக்காட்டுது என்பார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

காதோரம்  நரைக்க ஆரம்பித்து விட்டது. ஆனாலும் வாழ வேண்டும் எழுத வேண்டும் பகிர வேண்டும் என்ற ஆசை இன்னும் நிறைய்ய்ய்ய  இருக்கிறது.

Monday, July 25, 2011

கோத்ரா நினைவுகள்



குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிந்த நேரம் அது( பிப்ரவரி 27,2002 காலை சுமார் 8 மணிக்கு) அதை ஒட்டிய நிகழ்வுகளால்  வெளியே எங்கேயும் செல்ல முடியாது. எங்கேயும்ஊரடங்கு. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் வாரியாக ஊரடங்கு (CURFEW) உத்தரவு.  நம்ம ஊரைப்போல ஒரு போலீஸ் 30(2) சட்டம் அல்லது 144 தடைச்சட்டம்( நான்கு பேருக்கு மேல் கூட்டமாக ஒரு இடத்தில் இருக்கக்கூடாது) என்பதையெல்லாம் தாண்டியது ஊரடங்கு. நடமாட்டமே இருக்கக்கூடாது. அல்லது அவர்கள் சொல்லும் நேரத்தில் மட்டுமே ஊருக்குள் நடமாட முடியும்.

ஒரு 12 நாட்கள் நான் தங்கியிருந்த தொலைபேசி நிலைய வளாகத்திற்குள் இருக்கிற குடியிருப்புதான். அவ்வப்போது   தொலைபேசி நிலையத்திற்கு எதிரில் இருக்கும் கலெக்டர் அலுவலகத்தினின்றும் திருமதி  ஜெயந்தி ரவி (DISTRICT MAGISTRATE AND COLLECTOR) குஜராத்தியில் ரேடியோவில் பேசுவார் .


எட்டாம் எண் போலீஸ் ஸ்டேஷன் ஏரியாவுக்கு இரண்டு மணி நேரம் ஊரடங்கு ரத்து என்று செய்தி வரும்  அதைஒட்டி நாங்கள் காய்கறி வாங்க வெளியே செல்ல முடியும். எங்கள் தொலை பேசி நிலையத்தின் பின்னால் தான் மாவட்ட எஸ் பி அவர்களின் அலுவலகம். RAF  என்று பொறிக்கப்பட்ட ஊதாக்கலரில் சீருடை அணிந்த ஆண் பெண் காவலர்கள் வஜ்ரா என்ற வாகனத்துடன் எங்கு பார்த்தாலும் திரிந்தார்கள். குறிப்பாக எஸ் பி அலுவலகத்தில் பல மணி  நேரங்கள் வண்டியிலும் வெளியிலும் இருந்தார்கள்.


நான் தங்கியிருக்கும் கோத்ரா தொலைபேசியகத்திலிருந்து கோத்ரா மாவட்ட தொலைபேசி அலுவலத்திற்கு சென்று வர ஒரு ஜீப் கூட இருந்தது. ஆனாலும் அதில் செல்ல முடியாத நிலைமை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று முறைப்படி நாங்கள் வேலை செய்ய இருப்பதால் எங்களுக்கு ஒரு "பாஸ்" வேண்டு மென்று  அதற்கான மனு கொடுத்து  கலவரம் நடந்து நான் கைந்து நாட்கள் கழித்து 04/03/2002 அன்று ஒரு கடிதம் (பாஸ்) சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் அவர்களின் கையொப்பத்துடன் தரப்பட்டது.


அந்தப்பாஸை வைத்துக்கொண்டு ஊரடங்கு அமலில் இருந்தாலும்கூட நாங்கல் சுதந்திரமாக ஜீப்பில் வெளியில் சென்று வர முடிந்தது. அது மேலும் ஒரு ஒருவாரகாலத்திற்கு. எனது பெயர்" நாராயண்" என்றுதான் இருக்கும். நாராயணன் என்பதெல்லாம் தெற்கேதான் வடக்கே செல்லாது. அந்த உரிமச்சீட்டின் அசல் இதோ: