வலைப்பதிவில் தேட...

Tuesday, March 30, 2010

மயான 'அமைதி'

'மயான அமைதி' என்று

சொல்லாடல்களில்

கதைகளில் சிலர்

கதைத்திருக்கிறார்கள்

மயானத்திற்கு போகாமல் தான்

எழுதி இருப்பார்கள் அவர்கள்

மயானத்திற்குப்போய் வந்தால்

அப்படி எழுதி இருக்கமாட்டார்கள்

என்று நான் யோசித்ததுண்டு

'வாய்க்கரிசி போடுங்கள்'

'காணிக்கை போடுங்கள்'

'மன்னைத்தள்ளுங்கள்'

'கடைசியா முகத்தை பார்துக்கிங்க '

'என்னடா குழி வெட்டியிருக்கீங்க'

'எங்க ஊருலேல்லாம்

இவனுங்களை வைக்க வேண்டிய இடத்தில

வச்சிருவோம்'

'ஒங்களுக்கெல்லாம் திமிரு ......'

'மொட்டை எடுக்கிறவங்க வாங்க சாமி'

'கொல்லி ஓடைக்கிரவங்க வாங்க'

'சின்னப்பயளுகல்லாம் தள்ளிக்கொங்கடா'

'ஏல போட்டபுள்ளைஹல்லாம் ஏன்டா

சுடுகாட்டுக்கு கூட்டியாரிங்க'

'கடைசி வரைக்கும் ஒன்னையப்பாக்கனுன்னு

கட்டை கெடந்து துடிச்சி போச்சப்பா '

'சொதந்திரம் கொடுக்கணும் வேட்டிய விரிங்கப்பா'

'தேர் வாடகை குழி வெட்டினது தேர் சிங்காரிச்சது

எழவு சொல்ல கூலி ....

'ஒங்களுக்கு ரொம்ப ரேட் எறிபோச்சப்ப '

'ஆனது ஆகிபோச்சி அந்த எடத்தை

கடைசிப்பயளுக்கு எல்லாம் சேர்ந்து

எழுதி குடுத்திருங்கப்பா'

கொல்லி ஓடைச்சவன் திரும்பிப்பார்க்காமல்

போய்க்கிட்டே இருப்பா

ஒரு பிணத்துக்கு மட்டும் இவ்வளவு பேச்சு

அப்புறம் எங்கே மயான அமைதி.



Wednesday, March 3, 2010

பிணம் தூக்கிகள்


"நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைஎல்லாம் தூக்கி செல்லும்
அந்த நாலு பேருக்கு நன்றி"
என்று எம்ஜியார் வாயசைபபில்
(சங்கே முழங்கு என்ற படத்தில் )
வாழும் பொது சாதி
சனத்தோடு வாழுகிறார்கள்
போகும்போது தனியே போகிறார்கள்
அவரவர் வாழ்ந்த அடையாளத்தொடு
இடுகாடு போகிறார்கள்

பொன்னுசாமி செட்டியார் இறந்து போய்விட்டார்.
அவர் வாழ்ந்த காலங்களில் அவரது சாதியில் யாரும்
இறந்து போய்விட்டால் இவர் போய்க்கலந்து கொள்வது இல்லை
எனவே இவரைதூக்கிப்போக அவரது சாதியில் ஒரு நாலுபேர்
இல்லாமல் போனார்கள்

இறந்தவரை 'அடக்கம்' செய்யும் சாதியிலிருந்து ஒரு நாலு பேருக்கு
கூலி கொடுத்து அவரைதூக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆளுக்கு பதினைந்து ரூபாய் என்று பேசி முடிக்கப்பட்டது.

தூக்குவதில் உள்ள சிரமம் என்னவென்றால்
நாலு பேரும் ஓரே மட்டமான ஆளாக இருக்க வேண்டும்
நான் கொஞ்சம உயரமானவன்.
தோல் பாரம் இயல்பாகவே அழுத்தியது
துண்டைபோட்டுக்கொண்டேன்.
குழியை மூன்று முறை சுற்றி தேரை இறக்கி வைத்தோம்

Tuesday, March 2, 2010

கதர் சட்டை


கதர் சட்டையில் ஒரு கம்யுனிஸ்ட்
காணமுடியாது சாதாரணமாக
அவர்
காணாமல் போனது வும் அப்படித்தான்
கம்யுனிஸ்டுகள்
கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்
தற்கொலை செய்து கொண்டது இல்லை