வலைப்பதிவில் தேட...

Wednesday, June 2, 2010

தீண்டாமை ஒழிப்பு மாநாடு

"தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்"
என்று எல்லா தமிழ் நாடு அரசுப்பாட நிறுவன புத்தகங்கள் அனைத்திலும் அச்சிடப்பட்டு இருக்கிறது.

முதலில் பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்கு
தீண்டாமை என்பது என்னவென்று தெரிந்திருக்க வேண்டும்.

"இவர்கள் செய்வது இன்னவென்று தெரியாமல் செய்கிறார்கள். 
இவர்களை மன்னித்தருளும் பிதாவே" 

என்பது போல தீண்டாமையைக்கடைப்பிடிப்பவர்கள் தாங்களாகவே பள்ளிப்பருவம் முதல் ஆட்பட்டு தன்னையும் அறியாமல் நம்மில் நான்கில் ஒருவரை தன்னிலும் கீழாக தள்ளி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

கடந்த 28/05/2010 மற்றும் 29/05/2010 இரண்டு நாட்களாக புதுக்கோட்டையில் நடைபெற்ற  தீண்டாமை ஒழிப்பு   முதல்  மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களில்    நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் தமிழகத்தில் 7000 கிராமங்களில் தீண்டாமை கொடுமை   நிலவி வருவதாக கள ஆய்வு  சிது அதை வரிசைப்படுத்தி சமன் செய்யச்சொல்லி   இருக்கிறார்கள் இந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்.

"திருக்குவளை இருந்தென்ன
இரு குவளை இருக்கிறதே"

என்ற ஒரு கவிதை வரிக்கிணங்க,

தமிழ் நாடு முழுதும் இரட்டைக்குவளை முறை இன்று முதல் ஒழிக்கப்படுகிறது என்ற நிர்வாக ரீதியான ஒரு உத்தரவை ஒரு தலித்தை தனது சம்பந்தியாக ஏற்றுக்கொள்கிற  மனப்பக்குவத்தில் இருக்கிற ஒரு முதல்வரால் முடியாமல் வேறு யாராலும் முடியாது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமிருக்க முடியாது. (இவரால் ஒரு 400 கோடி ரூபாயை செலவழித்து ஒரு சட்டசபைகட்டிடத்தை ஒரு ஆண்டுக்குள் கட்ட முடிந்திருக்கிறது: ஒரு 400 கோடி ரூபாயில் உலகத் (செம்மொழி)தமிழ் மா நாட்டை நடக்க வைக்க முடிகிறது)

இந்துக்கள் மட்டுமல்லாது இங்கே( இந்தியாவில்தான்) உள்ள கிறித்தவர்களும், முஸ்லிம்களும் கூட தங்களால் ஆன தீண்டாமையைக்கடைப்பிடித்துக்கொண்டே  இருக்கிறார்கள்.
தங்களுக்கு சமமாகக்கருதும் சாதியினரை "மாமா" என்று விளிக்கும் முஸ்லிம்கள் கூட  தலித்துகளை  "மாமா" என்று அழைப்பதில்லை என்பதை எனது பதிவு http://sugadevnarayanan.blogspot.com/2010/02/blog-post_23.html இல் குறிப்பிட்டு இருந்தேன்.

"ஏழையென்றும் 
அடிமையென்றும்
எவனுமில்லை சாதியில்                                         
இழிவு கொண்ட மனிதரென்பார் 
இந்தியாவில் இல்லையே"
என்பார் பாரதி.

"வேதங்கள் ஓதும் பார்ப்பானின்     
செயலைவிடவும்
மேன்மையானது
ஒரு செருப்புதைப்பவனின்
படைப்பு "
என்பார் விவேகானந்தர்.

5 comments:

hariharan said...

நல்ல பதிவு, ஆனாலும் அந்த மாநாட்டைப் பற்றி இன்னும் அதிகம் எழுதியிருக்கலாம்.

ஜோதிஜி said...

உங்கள் ஒரு விமர்சனம் இங்கு வர வைத்தது. இணைந்த பயணத்தில் பெருமை கொள்கிறேன்.

அழகிய நாட்கள் said...

ஹரிஹரன்,
ஜோதிஜி,
இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

AkashSankar said...

உங்கள் கருத்து சரி...ஆனால் எதிர்பார்க்கும் ஆள் தான் சரியில்லை

Anonymous said...

ஜாதி வெறி பிடித்த இந்திய கிறிஸ்தவர்கள்
Christian church untouchablity
http://marayar.blogspot.in/