வலைப்பதிவில் தேட...

Monday, October 12, 2009

ஜெய்ப்பூர் நினைவகள்

Sunday, April 12, 2009

 


118 வயது வரை வாழ்ந்த ஹபிப் மியான் என்பவரின் கடைக்கு கடந்த 2008ஆகஸ்ட் மாதத்தில் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது . அவரது கடை ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூரில் இருக்கிறது. அது ஒரு கடைக்கோடியில் இருக்கும் கடைவீதி நுழைந்தவுடன் அவரது புகைப்படம் வரவேற்கிறது முற்றிலும் ஒட்டகத்தின் தோலினால் ஆன செருப்பு, சூ ,பெல்ட், பர்ஸ் இத்யாதி ,இத்யாதிகள் கடை நிரம்ப இருந்தது. நானும் நண்பர்களும் சூ வாங்க சென்றிருந்தோம் . சூ பெல்ட் என பிடித்த சில பொருட்களை வாங்கினோம். நண்பர் ஒருவருக்கு அவர் வாங்கி வந்த சூ சைஸ் பொருந்தவில்லை என்பது நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்த பிறகுதான் தெரிய வந்தது . அங்கே சரியாக இருந்தது போல் இருந்தது விடுதிக்கு வந்தபிறகு சரியாகப்படவில்லை. அந்த கடைக்குள் நுழைந்ததுமே அவரது புகைப்படம் முகமன் சொல்லுவது போல் வரவேற்கிறது. அங்கிருந்த வேலையாட்களிடம் விசாரித்தேன் ஆம் அவரேதான்.

விஷயம் ஒன்றுமில்லை அவர் அங்கிருந்த மன்னருக்கு செருப்பு தைக்கும் தொழில் செய்பவராக இருந்திருக்கிறார் . 58வயதில் அவரது ஒய்வு என்று கொண்டால் அதற்குப்பிறகு அவர் ஒரு 60 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிரார ஒரு ரூபாய் 26 பைசாவிலிருந்து அவரது பென்ஷன் ரூபாய் 2000௦௦௦மாக வாங்கி வந்த நேரம் அவரது மரணம் சம்பவித்து இருந்ததது அவர் காலமாகிப்போன பத்து பதினைந்து நாடகளில் நாங்கள் அவரது கடைக்கு சென்றிருந்தோம் நண்பருடைய ஷூவை மாற்றவேண்டி திரும்பவும் அந்த கடைக்கு செல்ல வேண்டி இருந்தது ஒரு மாருதி வான் பிடித்து சென்றோம். அந்த வண்டியின் ஓட்டுனர் பெயர் சுக்லா நல்ல மதிய நேர வெயில் கோத்ராவில் பழகிய ஹிந்தி உதவியது . ஒரு முசல்மான் பகுதியை வான் கடந்து கொண்டிருந்தது அப்போது அவர் (சுக்லா)ரன்னிங் கமெண்டரி உதிர்த்தார் . இதுதான் ஜெய்ப்புரின்பாகிஸ்தான் என்றார் . தூரதிருஷ்டமாக நாங்கள் செல்ல வேண்டிய கடை கூட ஒரு முசல்மான் என்பதை சொல்லவேண்டியதில்லை. நான் கேட்டேன் அவர்களும் இந்த நாட்டுக்காரர்கள் தானே என்று . வான் நகர்ந்து மேலும் சென்றது . நகரசுத்தி தொழிலாளர்கள் பகுதி வந்தது . அவர் மீண்டும் கமெண்டரி சொன்னார் இது தான் சேரிப்பகுதி இவர்கள் அசுத்தத்தை சுத்தம் செய்பவர்கள் என்றார் . அவர்களும் மனிதர்கள்தானே ஒரு சிலர் அசுத்தப்படுதுவதால்தானே இவர்கள் சுத்தப்படுத்த வேண்டி இருக்கிறது என்றேன் . அவருக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது எனது நண்பர்கள் ஏன் அவரிடம் விவாதம் என்றார்கள். எனக்கொன்றும் இல்லை அவரது பதில் தான் என்ன என்று கேட்போமே என்றேன். இறுதியாக அவரால் பதில் சொல்லமுடியாத ஒரு கட்டத்தில் 'சப் பகவான் கா மேற்பணி ' (எல்லாம் இறைவன் செயல் ) என்று அவர் முடித்துக்கொண்டார். அதாவது சிலர் அசுத்தப்படுத்த பிறவி எடுத்து இருப்பதும் அதை சிலர் சுத்தப்படுத்த லவித்திருப்பதும் அவரவர் பிறப்பின் பயன் என்கிற பாணியில் அவரின் வாதம் இருந்தது. அவர் அப்படிதான் இருப்பார் ஏனென்றால் அவர் சுக்லா (பிறப்பால் பிராமணன்) . அதன் பிறகு அவர் ரன்னிங் கமெண்டரி எதுவும் சொல்லவில்லை. நான் ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன் நமக்கு தெரியாத எதையும் நமக்கு தெரிந்தது போல் இருக்கும் கடவுளிடம் தள்ளிவிடுவது என்பது மட்டும் . நண்பர் சூ சைஸ் மாற்றிக்கொண்டார் அறைக்குத்திரும்பினோம்.

சுக்லாவான அவர் ஏன் வான் ஓட்டுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. நமது நாட்டில் நிலவக்கூடிய சாதிய முறை பிரமிட் போன்ற வடிவமைப்பு கொண்டது . நமக்கு மேலே உள்ளவர்களைப்பற்றி எந்தக்கவலையும் இல்லை ஆனாலும் நமக்கு கீழே ஒரு சில சாதியினராவது இருக்க வேண்டும் என்கிற அக்கறை மட்டும் எப்படி பொது மனித விதி மட்டும் புரியவில்லை.

'ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பார் இந்தியாவில் இல்லையே '- பாரதி

Sunday, October 11, 2009

சண்டாளன்



வடிவேலு என் கிற நடிகர் காமெடி செய்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட சாதியைத்திட்டுவது என்பதை நோக்கமாககொண்டிருக்கிறார். அல்லது கொண்டிருந்தார். நிறையப்படங்களில் அந்த வசனத்தை உச்சரித்து கைதட்டலை வாங்கிக்கொண்டிருக்கிறார் இன்னமும் கூட். நம்மை அறியாமல் நாமும் கூட மனம் விட்டு சிரித்திருப்போம்.

உண்மையில் அது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல வேதனைப்படவேண்டிய அம்சம்  நாம் அனைவரும் எந்த வகையில் பார்த்தாலும்.
ஆனால் சமீபத்தில் சென்சார் போர்டுக்காரர்கள் அந்த வசன உச்சரிப்பை தவிர்த்துவிடுங்கள் என்று கூறியதாக ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. அவர் அந்த உச்சரிப்பில் பேசி நடித்தாலும் கூட இவர்கள்  "MUTE" செய்து விடுவார்கள் அவ்வளவுதான்.

தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர்  திரு கருணா நிதி அவர்கள் கூட ஒருமுறை அந்த வார்த்தையை உச்சரித்து வாபஸ் வாங்காமலே இருந்து கொண்டார்.

தங்கத்தமிழ் நாட்டில் 18 சதமான மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுடைய சாதி எண்ணிக்கை ஆக மொத்தம் 76. அதில் 15 ஆவதாக பட்டியலிடப்பட்டிருப்பது "சண்டாளா" என்பது.
தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களின் சாதியின் பெயரால் திட்டுவது என்பது தடை செய்ய்யப்பட்டிருக்கிறது. அது ஒரு வகை வன் கொடுமை.

தலித்துகளுக்கு எதிரான வன் கொடுமை ஒழிப்புச்சட்டம் 1989 ன் படி அப்படி சாதியைசொல்லித்திட்டியவர்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்ப்டுவார்கள்.

ஆனால் காமெடியன்  வடிவேலுவோ அல்லது இந்த அவச்சொல்லை உச்சரித்த வேறு எந்த முக்கியப்புள்ளியோ இப்படியான எந்த நடவடிக்கைக்கும் ஆளாக வில்லை.

காரணம் தலித் மக்களிடையே கல்வியறிவு மற்றும் விழிப்புணர்ச்சி இல்லாத நிலைமைதான். எப்படியோ கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தலித் அருந்ததியர் என்ற மிகவும் கீழ் நிலையில் இருப்பவர்களுக்கான போராட்டம் இடது சாரிகளால் எடுக்கப்பட்டதினால் சென்சார் போர்டுக்காரர்கள் சுதாரித்துக்கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை.

தற்சமயம் அந்தத வார்த்தையை உச்சரித்து திட்டுவது தடை செய்யப்பட்டிருப்பது தலித் மக்களையும் அவர்கள் மனிதர்களாகப்பார்க்கத் துவங்கி இருப்பதைக்காட்டுகிறது. வசனம் நம் காதில் விழாத அளவுக்கு அதை MUTE செய்து விடுகிறார்கள்.

அது சரி. இது வரை அவர் சொன்ன அந்த வார்த்தைகள் பல்வேறு திரைப்படங்களில்பதிவுகளாக நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமாக காமெடிக்காட்சிகளில் உலா வந்து கொண்டிருக்கிறதே அதை ஒன்றுமே செய்ய முடியாதா?